யாழ்ப்பாணத்தில் கர்ப்பிணிக்கு எய்ட்ஸ் நோயா?

இந்த வருடம் யாழ்ப்பாணத்தில், 5 பேர் எயிட்ஸ் நோயாளியாக இனங்காணப்பட்டுள்ளனர். அதிலும் ஒரு கர்ப்பிணி பெண்ணும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் , யாழ் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான மூவர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என, யாழ் போதனா வைத்தியசாலையின் பாலியல் தொற்று நோய் தடுப்பு சிகிச்சை பிரிவின் வைத்தியர் தாரணி குருபரன் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் மாத்திரம் யாழ் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான அறுவர் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 250 பேர் எயிட்ஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை இனங்காண்படுகின்றன. அதில் 25 பேர் வரையில் கர்ப்பிணிப் பெண்களாவர்.

இந்த வருடம் யாழ்ப்பாணத்தில், 5 பேர் எயிட்ஸ் நோயாளியாக இனங்காணப்பட்டுள்ளனர். அதிலும் ஒரு கர்ப்பிணி பெண்ணும் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 1987ம் ஆண்டிலிருந்து இன்று வரை, 90 ற்கும் மேற்பட்டவர்கள், யாழில் இனங்காணப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014ம் ஆண்டில், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட எச்.ஐ.வி தொற்று தொடர்பிலான ஆய்வின் போது, 39 பேருக்கு எச் ஐ வி தொற்று காணப்பட்டமை கண்டறியப்பட்டதாகவும் இவர்களில் 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பதோடு எஞ்சியிருப்போர் அநுராதபுரம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

எனினும் 2014ம் ஆண்டில், யாழில் எயிட்ஸ் நோய் சிகிச்சை பிரிவு ஆரம்பமான பின்னர் அவ்வாறான இறப்புக்கள் ஏற்படவுமில்லை எனவும் வைத்திய அதிகாரி தாரணி குருபரன் தெரிவித்திருந்தார்.

HIV Vs AIDS