சாவகச்சேரியில் மனைவிக்கு நைட்டி வாங்கிக் கொடுத்த கணவனுக்கு ஏற்பட்டுள்ள நிலை

தீபா­வ­ளிப் பண்­டி­கைக்­காக அன்­பு­டன் வாங்கி வந்த உடுப்­பு­களை மனைவி உதா­சீ­னம் செய்­த­து­டன் வாய்க்கு வந்த வார்த்­தை­களை அள்ளி வீசி­ய­தால் ஆத்­தி­ர­முற்ற கண­வன் கையில் கிடைத்த தும்­புத்­த­டி­யால் விளா­சித் தள்­ளி­னார்.

இந்­தச் சம்­ப­வம் தென்­ம­ராட்சி கிழக்­குப் பகு­தி­யில் இடம்­பெற்­றுள்­ளது.

தாக்­கு­த­லுக்கு இலக்­கான மனைவி மருத்துவ­ம­னை­யொன்­றில் சிகிச்சை பெற்ற வேளை­யில் பொலி­ஸா­ருக்­குக் கொடுத்த வாக்­கு­மூ­லத்­தை­ய­டுத்து பொலி­ஸார் கணவரைக் கைது செய்­த­னர்.

அவர் சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் முற்­ப­டுத்தப்­பட்­டார். அவரை எச்­ச­ரித்த நீதி­வான் 25 ஆயி­ரம் ரூபா பிணை­யில் செல்ல அனு­ம­தித்­தார்.

indian-woman