வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த 3-ஆம் தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
அலுவலக வேலை நாள்களில் வட்டாட்சியர் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விடுமுறை தினமான இன்று வாக்குச் சாவடி அமைவிடங்களாக உள்ள இடங்களில் சிறப்பு முகாம்களுக்கும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 8 ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற்றது. தமிழகத்தில் ஏற்கெனவே ஒரு சிறப்பு முகாம் நடைபெற்ற நிலையில், மற்றொரு சிறப்பு முகாம் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது.
பெயர் சேர்ப்பு, நீக்கம், தொகுதிக்குள்ளே இருப்பிடத்தை மாற்றியதால் தேவைப்படும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் அளிக்கப்படும். பெயர் சேர்ப்பு, நீக்கல் பணிகளுக்காகச் செல்லும் வாக்காளர்கள் அண்மைக் காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இரண்டை எடுத்துச் செல்ல வேண்டும்