ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறார் .

நான் மக்களைப் பிரித்து விட்டேன் என்று மன்னிப்பு கேட்கும் மார்க் ஜுக்கர்பெர்க்

இன்று உலகில் அதிகமானோரால் பயன்படுத்தப்படுகின்ற ஒரு சமூக தளம் தான் ஃபேஸ்புக்.

1 (1)

இன்று வரை 200 கோடி மக்களால் செயற்படுத்தப்படும் இந்த ஃபேஸ்புக் மூலம் மக்களை பிரித்து விட்டதாக எண்ணி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறார் .

நான் உருவாக்கிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் மூலம் மக்கள் முரண்பட்டு கொள்கின்றார்கள் எனவும் கூறுகின்றார் .

யூதர்களின் புனித தினமான யோம் கிப்புர் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:

நம்முன் கடந்து போன ஒரு வருடத்தை பிரதிபலிக்கும் அதே நேரத்தில் நமது தவறுகளுக்கு மன்னிப்பினைக் கோரி நிற்கிறோம்.

நான் உருவாக்கிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் மற்றும் அதன் செயல்பாடுகள் மூலம் பெரும்பாலும் மக்களைப் சேர்ப்பதற்குப் பதிலாக பிரித்துவிட்டது

அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னை மேம்படுத்திக் கொண்டு சரியாகச் செயல்பட முயற்சிக்கிறேன்.

இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.