தங்கை மயக்கம்!! அண்ணன் பலி!! முல்லைத்தீவில் பரிதாபம்!!

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் தனது தங்கை மயக்கமடைந்துள்ள செய்தி பாடசாலையிலிருந்து கிடைக்க பெற்றதை தொடர்ந்து தனது தங்கையை பார்ப்பதற்காக அவசரமாக உந்துருளியில் பாடசாலை நோக்கி விரைந்த குறித்த இளைஞர் எதிரே வந்த கப் ரக வாகனத்தில் மோதுண்டு மிகவும் ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அங்கே உயிரிழந்துள்ளார்.

 

66e03726aede1accab92a5edfa0196b9_1506956978-s

இவ்வாறு உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த நிஷாந்தன் (வயது25 ) என்பவராரவர்.

குறித்த பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை கெப் ரக வானம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் முற்பகல் அளவில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பில் கெப் வண்டியைச் செலுத்திய சாரதியை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.