இந்திய அணி வீரர் பாண்டியாவின் வெற்றிக்கு பின்னால் அணித் தலைவர் விராட் கோஹ்லி இருப்பதாக இர்பான் பதான் கூறியுள்ளார்.
இந்தியா – அவுஸ்திரேலியா நடப்பு தொடரில் அபாரமாக விளையாடி வரும் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா நட்சத்திர வீரர் அந்தஸ்தை பெற்றுள்ளார்.
அவரை பலரும் அடுத்த கபில்தேவ் என அழைக்கிறார்கள்
இந்நிலையில், பாண்டியா குறித்து பேசிய இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான், பாண்டியாவின் வெற்றிக்கு பின்னால் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி உள்ளார்
பாண்டியா மட்டுமல்ல இந்தவொரு இளம் வீரர்களாக இருந்தாலும் அவர்கள் வளர்வதற்கு அணித்தலைவரின் உறுதுணை முக்கியமாகும்.
உதாரணத்துக்கு உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கேதர் ஜாதவ்க்கு விராட் கோஹ்லி இந்திய அணி தலைவராக பொறுப்பேற்ற பின்னரே அணியில் இடம் கிடைத்தது.
கோஹ்லி இவர்கள் பின்னால் இருந்தாலும் வீரர்கள் திறமையை நிரூபித்தால் மட்டுமே அணியில் நீடிக்க முடியும் என பதான் கூறியுள்ளார்.