இளம் பெண் ஒருவர் தற்கொலை முயற்சி

இளம் பெண் ஒருவர் உடலில் தீ வைத்து கொண்டமையினால் படுகாயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

அதிகமான கடன் சுமையின் காரணமாக அதனை செலுத்த முடியாமல் ஏற்பட்ட மனவிரக்தியில் அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

625.72.560.350.160.300.053.800.72.160.90

மினுவாங்கொட, பத்தடுஹேன பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரே இந்த முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை முயற்சித்தவர் 32 வயதுடைய 3 பிள்ளைகளின் தாய் என தெரிவிக்கப்படுகின்றது

அவர் தனது வீட்டில் உடல் மண்ணெண்னையை ஊற்றி கொண்டுள்ள நிலையில், தீயை அணைப்பதற்கு முயற்சித்த அவரது கணவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.