கட்சியின் சின்னம், பெயர் எல்லாமே ரெடி ……..

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பட வேலைகளில் கவனம் செலுத்தி கொண்டு இருந்தாலும், அரசியலில் என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து கவனித்து கொண்டு வருகிறார்.

மேலும் கட்சி துவங்குவதற்கான அனைத்து பணிகளையும் பொறுமையாக மக்களுக்கான திட்டங்கள் குறித்தும் அவரே அறிவிக்கயிருக்கிறார் என்று உறுதியான தகவல்கள தெரிவிக்கின்றன

தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட ரஜினி, போர்வரும் போது எதிர்கொள்வோம் என்று கூறியது முதல் அரசியல் பரபரப்பாக இயங்கியது.

ஆனால், அதன் பிறகு ரஜினிகாந்த் எந்த இடத்திலும் தனது அரசியல் பற்றி வாயை திறக்கவில்லை.

ஆனால் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் வட்டாரங்கள் ரஜினியின் புதிய கட்சி குறித்து உறுதியாக பேசி வருகின்றனர்.

முக்கியமாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், ரஜினியுடன் கூட்டணி அமைந்துவிட்டது என அறிவித்தே விட்டார்..இல்லாத கட்சிக்கு கூட்டணியா?

காந்திய மக்கள் கட்சியின் மாநாடு 20ம் தேதி திருச்சியில் நடக்க உள்ளது, இந்த மாநாடு ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஆரம்பிக்கும் கூட்டமாக இருக்கும் என வெளிப்படையாக அவரது நண்பர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரஜினி தனது அரசியல் திட்டம், மக்களுக்கான கொள்கைகள், கட்சி, சின்னம் மற்றும் கொடி அனைத்தையும் தனக்கு நெருங்கிய நட்பு வட்டாரங்கள் மூலம் உருவாக்கி வருகிறார் என்று கூறப்படுகிறது.

இந்த மாநாட்டில் கட்சி பற்றி அறிவிக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது.