ரசிகர்களின் அன்பால் அழுத நடிகை…

‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ள ஆத்மிகா, ரசிகர்களின் அன்பில் நெகிழ்ந்து கண்ணீர் சிந்தியுள்ளார். 

si
‘ஹிப் ஹாப்’ ஆதி இயக்கி, நடித்துள்ள படம் ‘மீசைய முறுக்கு’. கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான இந்தப் படம், ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில், ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார் ஆத்மிகா. மாடல், நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த ஆத்மிகாவுக்கு, ஃபேஸ்புக் மூலம் ஆதியின் நட்பு கிடைத்திருக்கிறது. டெஸ்ட் ஷூட்டுக்குப் பிறகு இந்தப் படத்துக்குத் தேர்வாகியிருக்கிறார் ஆத்மிகா.
“எனக்கும் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உண்டு. கவிதைகள்லாம் படிப்பேன். இந்தப் படம் தமிழுக்கு ஆதரவான படம். அதில், நானும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி” என்கிறார் ஆத்மிகா. இவர் செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு தருகிறார்களாம். தியேட்டரில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை ரசிகர்களின் ஆரவாரம் கேட்பதால், சந்தோஷத்தில் அழுதேவிட்டாராம் ஆத்மிகா. இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இன்னொரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.