கடற்படையினரால் யானைகள் மீட்பு

கிழக்கு கடற்படை பிரிவுக்குட்பட்ட கடற்படையினர் சிலர் திருகோணமலை ரவுண்டி தீவு மற்றும் கெவுலியாதுடுவ என்ற இடத்திற்கு உட்பட்ட கடற்பிரதேசத்தில் கடல் அலையினால் அடித்து செல்லப்பட்ட 2 யானைகளை மீட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடலோர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு வள்ளங்கள் மூலம் இந்த யானைகள் கடல் அலையினால் அடித்துச்செல்லப்பட்டதை அவதானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருகோணமலை வனவிலங்கு அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டு அவர்களது ஒத்துழைப்புடன் இந்த யானைகள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன.

04col39164841198 5858073 23072017 SNG CMY

elaphan trinco