தினமும் ஊறுகாய் சாப்பிடாதீங்க

நாம் உணவு உண்ணும் போது முக்கியமாக உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படும் பிரபலமான உணவுப் பொருள் ஊறுகாய்.
பல வகையான ஊறுகாய் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

ஊறுகாய் சுவை மிகுந்ததாக இருந்தாலும் அன்றாடம் இதை உட்கொள்ளும் போது பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அன்றாடம் சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, வீட்டிலேயே தேவைப்பட்டால் ஆரோக்கியமான முறையில் ஊறுகாயை செய்து சாப்பிடுங்கள்.

ஊறுகாயை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதில் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும்.

ஊறுகாயில் மசாலா பொருட்கள் அதிக அளவில் சேர்ப்பதால், அவற்றை தொடர்ந்து எடுத்து வர, அல்சர் பிரச்சனையை சந்திக்கக்கூடும். எனவே சாதாரணமாக அதிக அளவில் காரம் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, ஊறுகாயை அதிகம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

ஊறுகாயில் அதிக அளவில் உப்பு இருப்பதால், இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். ஆகவே இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பதோடு, இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஊறுகாயில் பதப்படுத்தும் பொருளான சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதால், நீரிழிவு இருப்பவர்கள், ஊறுகாயை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான நிலைமையை அவர்கள் சந்திக்கக்கூடும்.

ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும்.

ஊறுகாயில் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதிக அளவிலான உப்பு சேர்க்கப்பட்டிருப்பதால், அவற்றை அன்றாடம் எடுத்து வரும் போது, அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வை உணரக்கூடும்.

பிரபல கோவிலில் காதல் திருமணத்திற்கு தடை! ஏன் தெரியுமா?

தெலங்கானா மாநிலத்தில் உள்ள தாபல்லா லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவிலில் காதல் திருமணங்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் காதல் திருமணங்கள் மிகவும் பிரபலமானவை. அண்டை மாநிலங்களான கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வரும் தம்பதிகள் இங்கு வந்து திருமணம் செய்து கொள்வார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் மஹன்களி அணில் என்பவரும், ஹஸ்தாபுரத்தைச் சேர்ந்த மௌனிகா(18) இளம்பெண்ணும் தங்களது பெற்றோர் விருப்பதற்கு மாறாக இந்தக் கோவிலில் காதல் திருமணம் செய்துக் கொண்டனர்.

இதனையடுத்து தகவலறிந்து கோவிலுக்கு வந்த மௌனிகாவின் உறவினர்கள் அணிலின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து காதல் திருமணங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தாபல்லா லக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவில் நிர்வாக பொறுப்பாளர் வெங்கட் ரெட்டி கூறியுள்ளார்.

மாறுபட்ட வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் – ஹன்சிகா

‘எங்கேயும் காதல்’, ‘ரோமியோ ஜூலியட்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹன்சிகா-ஜெயம் ரவி இணைந்து நடித்திருக்கும் ‘போகன்’ படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இதில் நாயகியாக ஹன்சிகா நடித்து இருக்கிறார். அந்த அனுபவம் பற்றி கேட்டபோது “நானும் ஜெயம்ரவியும் சேர்ந்து நடிக்கும் படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ரசிகர்களுக்கும் எங்களை பிடித்திருக்கிறது. விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘போகன்’ படம் வித்தியாசமானது. அரவிந்த்சாமியுடன் முதல் முறையாக இந்த படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படக்குழு மிகவும் ஜாலியானது.

தமிழ் ரசிகர்கள் மிகவும் சிறந்தவர்கள். திறமையானவர்களுக்கு ஊக்கம் கொடுப்பார்கள். புதுமுகங்களை வரவேற்பார்கள். மிகவும் நல்லவர்கள். இதுபோன்ற ரசிகர்களை வேறு எங்கும் நான் பார்த்தது இல்லை. அவர்கள் விரும்புகிற நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

இப்போது வரும் புதுமுகங்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். புதுமுகங்கள் அதிகமாக வருவதால் கவலை இல்லை. போட்டி இருந்தால்தான் திறமையை வளர்க்க முடியும். ரசிகர்கள் பாராட்டும் வகையில் வித்தியாசமாக நடிக்க வேண்டும். ரசிகர்கள் அதைத்தான் விரும்புவார்கள். சிறிது தாமதம் ஆனாலும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.

திருமணம் செய்து கொள்ள மாட்டேன்: நடிகை சாய் பல்லவி

‘பிரேமம்’ மலையாளப் படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் நடித்தவர் சாய் பல்லவி. இதில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தமிழ்நாட்டை சேர்ந்த இவர் இப்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சாய்பல்லவி டுவிட்டரில் பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர், உங்கள் திருமணம் காதல் திருமணமா? பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணமா? என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த அவர், “நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன். ஏனென்றால் என் பெற்றோரை எப்போதும் கவனித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார்.

அவருக்கு பிடித்தவை பற்றி கேட்ட கேள்விகளுக்கு, தற்போது ‘ரெமோ நீ காதலன்…’ பாடல் பிடிக்கும். சூர்யாவின் படங்களில் பிடித்தது ‘காக்க காக்க’ என்று தெரிவித்தார்.நடிகை, டான்சர்,டாக்டர் ஆகியவற்றில் அவருக்கு பிடித்தமானது எது? என்று கேட்ட போது, “தெரியவில்லை. ஆனால் நோயாளிகள் முகத்தில் சிரிப்பு வரும் போது, மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று பதில் அளித்தார்.

உங்களுக்கு பிடித்தது சிக்கன் பிரியாணியா? மட்டன் பிரியாணியா? என்ற ரசிகரின் கேள்விக்கு ‘நான் சைவம்’ என்று கூறி இருக்கிறார்.

பட வாய்ப்புக்காக யாரையும் கெஞ்ச மாட்டேன்: நடிகை இலியானா

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்‌ஷய்குமாருடன், நடிகை இலியானா சமீபத்தில் இணைந்து நடித்த ‘ருஸ்டம்’ படம் வசூலைக் குவித்தது. அதன் பிறகு பாலிவுட்டில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இலியானா இப்போது ‘பாத்சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை இலியானா சமீபத்தில் பட விழாவொன்றில் கலந்து கொண்டு பேசுகையில் “பாலிவுட்டில் நடிப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டால் அது நம்மை உயர்த்தும். இல்லையென்றால் பாலிவுட் மொத்தமாக நம்மை சினிமாவை விட்டே துரத்தி விடும். நான் படவாய்ப்பு இல்லை என்றாலும் போய் வாய்ப்புக்காக கெஞ்ச மாட்டேன். கையேந்தி நிற்க மாட்டேன்” என்றார்.

தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்த இலியானா தற்போது தெலுங்கிலும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருடனுக்கு தாத்தா கொடுத்த ஷாக்: என்ன ஒரு எனர்ஜி தாத்தா உங்களுக்கு?

திருமணமாகி 04 வருடமாகியும் குழந்தை இல்லை! கணவன் எடுத்த விபரீத முடிவு!

திருமணம் முடித்து 4 வருடங்களாக குழந்தை ஒன்றில்லை என்ற காரணத்தால் மனமுடைந்து காணப்பட்ட இளைஞர் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் கலேவலைப் பொலிஸ் பிரிவிலுள்ள இப்பன்கட்டுவ, இந்தன்னொலுவத்தை என்ற இடத்தில் இடம் பெற்றுள்ளது.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது மரணமடைந்தவரின் மனைவி பொலிஸாருக்குத் தெரிவிக்கையில் திருமனம் முடிந்து 4 வருடங்களாக தமக்கு ஒரு குழந்தை இல்லை என கணவர் அடிக்கடி கவலைப்படுவதுண்டு.

அவரது வயது தற்போது 22 ஆகும். சம்பவ தினம் இரவு நான் சமயலறையில் சமைத்துக் கொண்டிருந்த போது வீட்டுக் கூரை அதிரும் சத்தம் கேட்டு போய் பார்த்த போது சாரி ஒன்றினால் தூக்கிலிட்டு இருப்தைக் கண்டு ஓடிச்சென்று கத்தி ஒன்றைக் கொண்டு வந்து சாரியை வெட்டினேன்.

பின்னர் அயலவர் ஒருவருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து கணவரை வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றோம். இருப்பினும் அவர் மரணமடைந்துவிட்டதாக வைத்தியர் தெரிவித்தார் என்று தெரிவித்துள்ளார்.

மேடையிலேயே கதறி கதறி அழுத இலங்கை வீரர் ஜெயவர்த்தனே!!

இலங்கையில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்று நோய் தொடர்பான சிறப்பு மருத்துவமனை அமைக்கவும் இலங்கை வீரர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என பலர் டிரையல் வாக் என்ற பெயரில் இங்கையில் 663 கிமீ தூரம் நடைபயணம் மேற்கொண்டு நிதி திரட்டி வருகின்றனர்.

இதில் மிகவும் முக்கிய பங்கு வகித்து வருபவர் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயவர்த்தனே. இவர் அவ்வப்போது இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், புற்று நோய் மருத்துவமனை அமைப்பதற்கான அறக்கட்டளை சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெயவர்த்தனே மேடையில் ஏறி புற்று நோய் தொடர்பாக பேசியபோது கண் கலங்கிய காட்சி அங்கிருந்த பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, இன்றைய நாள் மிகச்சிறந்த நாள் என்றும் மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. ஆனால் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன் என தெரிவித்து உள்ளார். ஜெயவர்த்தனேவின் சகோதரர் புற்றுநோயால் உயிரிழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் தமிழர்களின் பண்பாட்டில் நடனம் ஆடிய அசத்திய ஜோடிகள்!

இந்த 4 மாத்திரைகளும் உங்களை சோர்வடையச் செய்யும் என்பது தெரியுமா?

தொட்டதெற்கெல்லாம் மாத்திரை சாப்பிடுபவர்களும் உண்டு. மாத்திரைகள் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவர் பரிந்துரைத்தாலும் சில வகை மாத்திரைகள் சாப்பிட்டதும் உங்களால் வேலை செய்ய முடியாமல் சோர்வாக இருப்பது போல் தெரிகிறதா?

தூக்கம் வருவது போல பெரும்பாலான ஆன்டிபயாடிக் இருக்கும். அது போலவே சில மாத்திரைகள் உங்களை களைப்படையச் செய்யும். எவையென பார்க்கலாம்.

.மன அழுத்தத்திற்காக மாத்திரைகள் எடுப்பவர்கள் உண்டு. அதிலும் ஆண்களைக் காட்டிலும் இரு மடங்கு பெண்கள் மன அழுத்தத்திற்காக் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள் என கூறுகிறார்கள்.

செரடோனின் ஹார்மோன்தான் புத்துணர்விற்கும் நல்ல மன நிலைக்கும் காரணம். .இந்த மாத்திரைகள் செரடோனின் ஹார்மோனை ஒழுங்குபடுத்துகிறது.

அதே சமயம் மெலடோனின் சுரப்பையும் அதிகபபப்டுத்துகிறது. இதனால் மயக்க நிலை அளவுக்கு அதிகமாக ஏற்பட்டு உடலை சோர்வடையச் செய்கிறது.

 

நுரையீரல் தொற்று, மற்றும் ஆஸ்துமா போன்ற அலர்ஜிக்கு மாத்திரைகள் சாப்பிடும்போது, அவை மூளையில் நரம்பு மண்டல்த்தை கட்டுப்படுத்துகிறது. இதனால் மயக்க நிலை, தூக்கம் உண்டாகி உடலை சோர்வடையச் செய்கிறது.

 

உயர் ரத்த அழுத்தத்திற்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் அட்ரினலின் சுரப்பை குறைக்கிறது. அட்ரினலின் இதய துடிப்பை வேகப்படுத்தும். ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துபவை. உயர் ரத்த அழுத்த மாத்திரைகள் இந்த ஹார்மோனை குறைப்பதால் சோர்வு உண்டாகிறது.

 

மனப்பதட்டம் மற்றும் தளர்ச்சிக்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் நரம்பு மண்டலத்தை கட்டொப்படுத்துகிறது, இதனால் பொதுவாக உடல் நிலை பலவீனமாகி உடல் சோர்வை உண்டாக்குகிறது.

இரண்டாவது முறையாக கருத்தரிப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்!

முதல் கர்ப்பத்தில் ஏற்பட்ட சில விளைவுகளின் தாக்கம் 2-வது கர்ப்பத்தில் பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா என்பதை கீழே பார்க்கலாம்.

ஒவ்வொரு பெண்ணும் முதன்முதலாகக் கர்ப்பமாகும் போதும் சரி, குழந்தை பெறும் போதும் சரி… அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால், அதே பெண் இரண்டாவது முறை கர்ப்பம் தரிக்கும் போது பல மாற்றங்கள் தென்படும்.

இரண்டாவது கர்ப்ப காலத்தின் போது சில பக்க விளைவுகளும் தலை தூக்கும். முதல் கர்ப்பத்தில் ஏற்பட்ட சில விளைவுகளின் தாக்கம், இரண்டாவது கர்ப்பத்தில் பக்க விளைவுகளாக எதிரொலிக்கலாம்.

இரண்டாவது கர்ப்ப காலத்தில் களைப்பு மிக சாதாரணமாக ஏற்படும். முதல் கர்ப்பத்தில் கூட நீங்கள் இவ்வளவு களைப்பை அடைந்திருக்க மாட்டீர்கள்.

முதுகு வலி என்பது எந்த கர்ப்பத்தின் போதும் இயல்பாக வந்து வருத்தும். இரண்டாவது கர்ப்பத்தில் இந்த வலி இன்னும் அதிகமாகவே இருக்கும். இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குனியும் போது கூட, முழங்கால்களை மடக்கித் தான் குனிய வேண்டுமே தவிர, முதுகை வளைத்துக் குனியக் கூடாது.

ஒவ்வொரு கர்ப்ப காலத்தின் போதும் இந்தப் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே போகும். திடீர் திடீரென்று நரம்புகள் பின்னிக் கொள்ளும். எப்போதும் கால்களை நீட்டி வைத்துக் கொள்வது நல்லது. சிறு சிறு உடற்பயிற்சிகள் மூலமும் இதைச் சரி செய்ய முடியும்.

உங்கள் முதல் கர்ப்பத்தின் போது நீரிழிவு ஏற்பட்டிருந்தால், இரண்டாவது கர்ப்பத்திலும் இது பக்க விளைவாக ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே உணவுக் கட்டுப்பாட்டில் அதிக கவனம் எடுத்துக் கொண்டால் நீரிழிவைத் துரத்தியடிக்கலாம்.

நம் உதட்டின் இயற்கையான உதட்டு நிறத்தை பெறுவது எப்படி?

உதட்டுச்சாயங்கள் மற்றும் லிப் க்ளாஸ்கள் கொண்டு உதடுகளுக்கு வண்ணம் பூசி அழகு படுத்துவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் அதை தவிர சில இயற்கையான வழி முறைகளும் உள்ளன. அவைகள்,

– இயற்கை முறையில் பீட்ரூட் கொண்டு உதட்டை அழகுபடுத்தலாம், ஒரு பீட்ரூட் எடுத்து அதனை 30 நிமிடம் வரை வறுத்து கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து சூடு ஆறிய பின் இரண்டாக வெட்டி உட்புறம் உள்ள சிவப்பு பகுதியை உங்கள் உதட்டின் மேல் தேய்க்கவும். இதே முறையை பயன்படுத்தி உங்கள் கன்னங்களையும் அழகு படுத்தலாம்.

– செயற்கை பொருட்களை பயன்படுத்துவதை விட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தலாம். அதாவது சீமை களாக்காய்/குருதிநெல்லி (இந்த இரண்டும் ஒன்றே) சாறை பயன்படுத்ததுவதன் மூலமும் இயற்கையான நிறத்தை பெறலாம். இது உங்கள் உதட்டிற்கு அழகான சிவப்பு நிறத்தை தருவதோடு உங்கள் உதட்டையும் பாதுக்காக்கிறது.

– பெட்ரோலியம் ஜெல்லியுடன் செர்ரி சாற்றை (வாஸலின் போல) கலந்து
உதட்டிற்குஉபயோகப்படுத்தலாம். இதை உங்கள் உதட்டின் மேல் உபயோகபடுத்தி உதடுகளை அழகாகக்குவதோடு, இது உங்கள் உதடுகளை மென்மையாகவும் மற்றும் மிருதுவாகவும் வைக்கும்.
-கேக்குகள் செய்ய பயன்படுத்தப்படும் வண்ணத்ங்களையும் கொண்டு உங்கள் உதட்டிற்கு பயன் படுத்தலாம். அதில் சிறிதளவு எடுத்து உதடு முழுவதும் ஒரே மாதிரி தடவலாம்.

அயர்லாந்தில் ஒரு சுற்றுலாத் தலத்தில் திடீர் என கதவு போல திறந்து மூடிய பாறை

ஒவ்வொரு ஆணும் இந்த வீடியோவை கடைசி வரை பாருங்க !! முடிந்தவரை ஷேர் பண்ணுங்க!

கெளதமி, சுப்புலட்சுமியின் சவுகரியமும், சந்தோஷமுமே முக்கியம்.. மனம் திறந்தார் கமல்

நடிகை கவுதமியை பிரிந்தது குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் மனம் திறந்துள்ளார். உலக நாயகன் கமல் ஹாஸனும், நடிகை கவுதமியும் கடந்த 13 ஆண்டுகளாக லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கமலை பிரிவதாக கவுதமி ட்விட்டரில் அறிவித்தார். இது குறித்து கமல் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

கவுதமி

கவுதமிக்கு எது நிம்மதியை அளித்தாலும் எனக்கு சரி. தற்போது என்னுடைய உணர்ச்சிகள் முக்கியம் இல்லை. கவுதமி மற்றும் சுப்பு சவுகரியமாகவும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டியது தான் முக்கியம்.

நான் இருக்கிறேன்

அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அவர்களுக்கு எப்பொழுது எது தேவைப்பட்டாலும் நான் இருக்கிறேன் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

மகள்கள்

எனக்கு ஸ்ருதி, அக்ஷரா மற்றும் சுப்புலட்சுமி என 3 மகள்கள் உள்ளனர். இந்த உலகிலேயே நான் தான் மிகவும் அதிர்ஷ்டக்கார தந்தை என்று நினைக்கிறேன் என்றார் கமல்.

புற்றுநோய்

கவுதமிக்கு புற்றுநோய் ஏற்பட்டபோது கமல் அவருக்கு உறுதுணையாக இருந்தார். அண்மையில் கமல் கீழே விழுந்து காலில் அடிப்பட்டபோது கவுதமி அவருக்கு ஆதரவாக இருந்தார். ஒருத்தருக்கொருத்தர் உதவியாக இருந்த நிலையில் பிரிந்துவிட்டனர்.

விஜய் ரசிகர்களுக்கு பொங்கலுக்கு செம விருந்து!

விஜய்யின் பைரவா டீஸர் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்றை பெற்று வருகிறது. படத்திற்கான வேலைகளும் விரைவில் முடிய இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளிவரும் என்று கூறப்படுகிறது.

தீபாவளிக்கு டீஸர், கிறிஸ்துமஸிற்கு பாடல், பொங்கலுக்கு படம் என ஒரே விருந்தாக இருப்பதால் ரசிகர்கள் செம கொண்டாட்ட மகிழ்ச்சி உள்ளனர்.

 

அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதி இவர்தான்: அடித்துச் சொல்லும் ஆய்வாளர்கள்

அமெரிக்க ஜானாதிபதி தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில் அந்நாட்டின் 45-வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பார் என்று வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆய்வாளர்கள் குழு ஒன்று உறுதிபட கூறுகின்றது.

வாஷிங்டனில் வரலாற்று ஆசிரியராக இருந்து வருபவர் ஆல்லன் லிட்சுமன். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலங்களில் இவர் வெளியிட்டுள்ள கணிப்புகள் அனைத்தும் இதுவரை நிறைவேறியுள்ளன.

இந்த முறை இவர் தெரிவித்துள்ள கருத்துகள், இதுவரை அமெரிக்காவின் முக்கிய செய்தி ஊடகங்கள் எதுவும் வெளியிடாத வகையில் அமைந்துள்ளது. காரணம், இதுவரையான கருத்துக்கணிப்புகளில் டிரம்பை விடவும் ஹிலாரி கிளிண்டனே அதிக விழுக்காடு அதிகம் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

ஆனால் வரும் 8-ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மாபெரும் திருப்பம் ஏற்படும் எனவும், அதில் அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்பார் எனவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவின் தேர்தல் மற்றும் அரசியல் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் ஆல்லன், 1860 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டுவரையான அனைத்து அமெரிக்க தேர்தல்களையும் ஆராய்ந்து ஒரு புது கோட்பாட்டினை வடிவமைத்துள்ளதாகவும், அதன்படியே இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர் இதுவரை வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்புகள் அனைத்தும் துல்லியமாக அமைய தாம் உருவாக்கியுள்ள பதின்மூன்று அளவுகோல்களை பயன்படுத்துகின்றார்.

அதில் மக்களிடையே வேட்பாளர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு, வேட்பாளர்கள் குறித்த மக்களின் மதிப்பீடு அல்லது அவர்கள் மீது சமூகத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவைகள் வெற்றி தோல்வியை முடிவு செய்யும்.

இதில் ஆறு அளவுகோல்கள் டிரம்புக்கு சாதகமாக இருப்பதாகவும் அதனாலையே இந்த முறை டிரம்ப் ஆட்சியை கைப்பற்றி அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொள்வார் என ஆல்லன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி கடந்த செப்டம்பர் மாதம் ஆல்லன் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளுக்கு பின்னரே ஹிலாரி குறித்து டிரம்ப் குறித்தும் புகார்களும் குற்றச்சாட்டுகளும் நாளுக்கு ஒன்று என வெளியாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனாலும் அரசியல் சூழல் டிர்ம்புக்கு சாதகமாகவே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி இந்த தேர்தல் மிக நெருக்கமான முடிவுகளை கொண்டிருக்கும் என்றும், வெற்றி தோல்விகள் மிக அருகாமையில் இருக்கும் என்றும் ஆல்லன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1984 ஆம் ஆண்டு ரொனால்டு ரீகன் ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என்பதை முதன் முதலில் வெளியிட்டவர் ஆல்லன் என்பது குறிப்பிடத்தக்கது

யாழ். பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியது

யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று முழுமையாக வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கமைய வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட கலை பீடம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீட மாணவர்கள் இன்று கல்வி செயற்பாடுகளில் ஈடுபடுவதாக யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்ட விடயங்கள் குறித்து இன்று (02) அனைத்து தரப்பினரையும் தெளிவுபடுத்த எண்ணியுள்ளதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் சங்கம் கூறியுள்ளது.

ஜனாதிபதி மற்றும் மாணவர் பிரதிநிதிகளிடையில் நேற்று (01) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து வகுப்பு பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாகவும் துணைவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் கடந்த மாதம் 20ஆம் திகதி உயிரிழந்ததை அடுத்து மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

ஆரம்பத்தில் இந்த சம்பவத்தை விபத்து என பொலிஸார் குறிப்பிட்ட போது மாணவர்களின் சடலங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது, ஒருவருடைய சடலத்தில் துப்பாக்கிச் சூட்டு காயம் அடையாளம் காணப்பட்டது.

இதனை அடுத்து இந்த மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்ததை அடுத்து யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகம் மாத்திரமின்றி அனைத்து சாராரும், சம்பவத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற சந்திப்பில் தமிழ் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மாத்திரமே கலந்து கொண்டிருந்த நிலையில், வேறு எவரும் கலந்து கொள்ளவில்லை.

மேலும், சந்திப்பின் போது ஏனைய தமிழர் தரப்பினர் பேச்சு

குழந்தையின் உயிரை பறித்த தோடம்பழம்

தோடம்பழ விதை தொண்டையில் சிக்கி 11 மாத குழந்தையொன்று மூச்சுத்திணறி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று நேற்று சூரியவெவ, பெத்தேவெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த குழந்தை வீட்டில் விளையாடிகொண்டிருந்த போது ஏதோ ஒரு பொருள் தொண்டையில் சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்படவே நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும் மருத்துவர்களால் அந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் தொண்டையில் தோடம்பழ விதை சிக்குண்டிருந்தமை பின்னரே தெரியவந்துள்ளது.

இதேவேளை, குழந்தைகளை கீழே விளையாடவிடும்போது பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டுமென வைத்தியர்களும் பொலிஸாரும் தெரிவித்துள்ளனர்.

4 வயது சிறுமியை நரபலி கொடுத்த கும்பல்..! அதிர்ச்சி அளிக்கும் காரணம்..!!

அசாம் மாநிலத்தில் தொலைந்து போன மொபைல் போனை கண்டுப்பிடிப்பதற்காக 4 வயது சிறுமியின் கழுத்தை அறுத்து நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள ரத்னாபூர் என்ற ஆதிவாசி கிராமத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் கைகள் துண்டிக்கப்பட்டு, தலை வெட்டப்பட்ட நிலையில் ஒரு சிறுமியின் உடல் கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நரபலி கொடுக்கப்பட்ட சிறுமி சூனு கோட்பா கடந்த மாதம் 24 ஆம் தேதியில் இருந்து மாயமானதாக அவரது உறவினர்கள் காவல்துறையில் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ரத்னாபூர் கிராமத்தில் குடியிருந்து வரும் ஹனுமன் பூம்ஜி என்பவரது மொபைல் போன் திருடு போனதையடுத்து, போனை மீட்டெடுக்கும் நோக்கில் அவர் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவரது நண்பர் ஒருவர் அளித்த ஆலோசனையின் பேரில் பூம்ஜி, கப்பார் சிங் என்ற மந்திரவாதியை அணுகினார்.

மொபைலை கண்டுப்பிடிக்க வேண்டும் என்றால் காளி தேவிக்கு 4 வயது சிறுமியை உயிர்ப்பலி தர வேண்டும் என்று அந்த மந்திரவாதி கூறியுள்ளார்.
இதனால் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி சூனு கோட்பாவை கடத்தி சென்று நரபலி கொடுத்துள்ளனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய பூம்ஜி மற்றும் அவரது நண்பர் அலி ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். நரபலி பூஜை மேற்கொண்ட மந்திரவாதியை போலீஸார் தேடி வருகின்றனர்.