சி ஜ டியில் முன்னிலையானார் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (4) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்க முன்னிலையாகியுள்ளார்.

ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெறுதல் மற்றும் சர்ச்சையை கிளப்பிய 323 கொள்கலன் விடுவிப்பு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கமலின் தக்லைஃப் முதல் விமர்சனம்

கமல்ஹாசன்-மணிரத்னம் இருவருமே தமிழ் சினிமாவில் தங்களது துறையில் பெரிய உச்சத்தை எட்டியவர்கள்.

இவர்கள் பல வருடங்களுக்கு பிறகு தக் லைஃப் என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். சிம்பு, த்ரிஷாவும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

வரும் ஜுன் 5, அதாவது நாளை படம் வெளியாகவுள்ள நிலையில் ஒரு நிகழ்ச்சி கமல்ஹாசன், கன்னடம் தமிழில் இருந்து வந்தது என கூறியதால் பெரிய சர்ச்சையாகியுள்ளது.

இதனால் படம் பிளான் செய்தபடி கர்நாடகாவில் ஜுன் 5ம் தேதி வெளியாகப்போவதில்லை.

முதல் விமர்சனம்
இதுவரை படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 20 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

மும்பையில் தக் லைஃப் படத்தில் இந்தி வெர்ஷன் தணிக்கை செய்யப்பட்டுள்ள நிலையில் சோஷியல் மீடியா விமர்சகர் உமைர் சந்து படத்தையும் பார்த்துள்ளார்.

தக் லைஃப் திரைப்படம் ஒரு கல்ட் கிளாசிக் த்ரில்லர், நடிகர்களின் பர்ஃபார்மன்ஸ்கள் எல்லாமே புல்லரிக்க வைத்துவிடும்.

கமல்ஹாசன் மற்றும் எஸ்டிஆர் நடிப்பிலும் பவர் பேக்ட் ஆக்‌ஷன் காட்சிகளிலும் அடிதூள் கிளப்பிட்டாங்க. ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மணிரத்னத்தின் டெட்லி காம்போ மீண்டும் ரசிகர்களை மிரள விட காத்திருக்கிறது.

5க்கு 3.5 ஸ்டார் ரேட்டிங் கொடுத்து ட்வீட் போட்டுள்ளார் உமைர் சந்து.

விஜய் டிவி புகழ் கேப்ரியல்லா போட்டோ சூட்

விஜய் தொலைக்காட்சியில் பாப்புலர் ஷோக்களில் ஒன்றான நடன நிகழ்ச்சியில் நுழைந்து பின் சீரியல்களில் கால் பதித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை கேப்ரியல்லா.

இவர் விஜய் டிவியில் கடைசியாக ஈரமான ரோஜாவே 2 தொடரில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது சன் டிவியில் மருமகள் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்ஸ்டாவில் கேப்ரியல்லா வெளியிட்ட சில அழகிய லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,

விஜயின் மின்சாரக் கண்ணா புகழ் நடிகையை ஞாபகம் இருக்கா?

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999ம் ஆண்டு விஜய், ரம்பா, மணிவண்ணன், குஷ்பு என பலர் நடித்து வெளியாகி இருந்த திரைப்படம் மின்சார கண்ணா.

ஒரு பெண் தனது கணவர் செய்த கொடுமையால் ஆண்களை வெறுத்து வாழ்க்கையில் பெண்கள் மட்டுமே சூழ வாழ்கிறார்.

அவரது தந்கையோ ஒருவரை காதலித்து அதை தனது உயிருக்கு உயிரான அக்காவிடம் கூற பயந்து ஒரு டிராமா செய்கிறார். கொஞ்சம் காமெடியாகவும், சென்டிமென்ட்டாகவும் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை மோனிகா காஸ்டலினோ. இந்த படத்தில் இடம்பெற்ற ‘உன்பேர் சொல்ல ஆசை’ என்ற பாடல் மூலம் பிரபலமான இவர் படங்கள் நடிப்பதில் இருந்து விலகி தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

ஆளே மாறிட்டாரே
இந்நிலையில், கோலிவுட்டில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து மிகவும் பிரபலமான மோனிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதோ,

லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் பிரபல நடிகர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வருகிறார்.

லோகேஷ் தன்னுடைய படங்களின் மூலம் ஒரு தனி சினிமா பிரபஞ்சத்தை உருவாக்கியுள்ளார். அவரின் ‘கைதி’ தொடங்கி கடைசியாக வெளியான லியோ வரை அனைத்துமே இந்த LCUவில் அடங்கும்.

இந்நிலையில், லோகேஷ் தயாரிப்பில் தற்போது, பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், பென்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் LCUவில் ஒரு பகுதியாக உள்ளது.

தற்போது, இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, இப்படத்தில் நிவின் பாலி வில்லனாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இது தொடர்பான க்ளூ ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இலங்கை வந்த இந்திய பிரபலங்கள்!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ள மருத்துவ துறையை சார்ந்த தொழில் அதிபர்கள் மற்றும் தொழில்நுட்ப துறையை சார்ந்த பொறியியலாளர்கள் முக்கியஸ்தர்களுக்கிடையிலான விசேட சந்திப்பு ஒன்று நேற்று(3) இடமபெற்றது.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சில் இடம் பெற்றது.

இதில் பெருந்தோட்ட தோட்ட உட்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் , இந்திய பிரபலங்கலங்களை சந்தித்து கலந்துரையாடினர் .

சந்திப்பின் போது ஊடகத்துறை சார்பாக திரைப்பட நடிகரும் முன்னணி தொகுப்பாளருமான VJ விஜய் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

ஐ.பி.எல் RCB வெற்றி கொண்டாட்டத்தில் பலியான உயிர்கள்!

ஐ.பி.எல் RCB வெற்றி கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழwத சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ஓட்டங்களால் வீழ்த்தி முதல் முறையாக RCB அணி கோப்பையை கைப்பற்றியது. இதனை அந்த அணியின் ரசிகர்கள் நேற்று முதல் தற்போது வரை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.

கூட்ட நெரிசலால் களேபரமான மைதானம்
பெங்களூர் இல் இன்று 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் RCB வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தத் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் சின்னசாமி மைதானத்தை நோக்கி RCB ரசிகர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அங்கு பாரிய கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் RCB வீரர்கள் வரும்வரை பொறுமையாக இருக்காமல் ஸ்டேடியத்தின் சுவர்கள் மற்றும் வேலிகளில் ரசிகர்கள் ஏறிச் செல்ல தொடங்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் வெற்றிகொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வந்தவர்கள் கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலி முடி சாயத்தை விநியோகித்த வர்த்தகருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

நுகர்வோர் விவகார அதிகாரசபையால் கடந்த ஏப்ரல் மாதம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது தலா 10 கிராம் போலி முடி சாயத்தை பொதியிட்டு சேமித்து விநியோகித்ததற்காக வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த இரு வர்த்தகர்களுக்கு எதிராக நேற்று (03) மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விற்பனைக்காக அந்த பொருளை சேமித்து வைத்த புறக்கோட்டையில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அந்த போலி முடி சாயத்தை விற்பனைக்காக சேமித்து வைத்த வெல்லம்பிட்டி பகுதியை சேர்ந்தவரும், அவற்றை விநியோகித்த கொழும்பு 14 பகுதியை சேர்ந்தவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் நீதிமன்றம், நான்கு குற்றச்சாட்டுகளுக்கு தலா ரூ. 7,500 அபராதம் விதித்தது.

அத்துடன் குறித்த பொருட்களை விற்பனைக்காக விநியோகித்த கொழும்பு 14 இல் வசிக்கும் நபருக்கு அபராதத்துடன் 6 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம், அந்த தண்டனையை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தது.

விற்பனைக்காக தொடர்புடைய பொருட்களை சேமித்து வைத்த கொழும்பு 12 இல் அமைந்துள்ள குறித்த நிறுவனமும், குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் நீதிமன்றம் 7,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இந்த முடி சாயத்தின் வர்த்தக நாமத்திற்கு சட்டப்பூர்வ உரிமைகளைக் கொண்ட நிறுவனம் அதன் தயாரிப்புகளை 21 கிராம் பொதிகளில் சந்தைக்கு விநியோகிக்கிறது.

எனவே, போலி உற்பத்தியாளர் 10 கிராம் பொதிகளை உண்மையான உற்பத்தியாளரின் தகவலுடன் போட்டிக்கு எதிரான மற்றும் தவறாக வழிநடத்தும் வகையில் சந்தைக்கு வெளியிட்டிருந்தால், அவற்றை சந்தையிலிருந்து அகற்றுமாறு வர்த்தகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் இதுபோன்ற போலி பொருட்களை வாங்குவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற போலி பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கன்னட படங்கள் வெளியாகாது!

சென்னை: “கன்னட திரைப்படமான கேஜிஎப் 2 பாகங்கள் உள்ளிட்ட திரைப்படங்கள், தமிழ்நாட்டில் ரூ.100 கோடியை வசூலித்திருக்கிறது. இதனை கன்னட மொழி திரைப்படங்களாக பார்க்காமல், திரைப்படமாக மட்டுமே தமிழர்கள் பார்த்தனர். ஆனால், கமல்ஹாசன் பேசிய விவகாரத்தில் மொழி அரசியலாக பார்க்கப்பட்டிருக்கிறது. எனவே, கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக தடை இருக்கும் பட்சத்தில், இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் எந்தவொரு கன்னட திரைப்படமும் வெளியாகாது” என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டின் மாபெரும் கலைஞன் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படம் வரும் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து, ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் கன்னட மொழி’ என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கமல்ஹாசன் பேசியது சரியே.

ஆனால், கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்புகள் தமிழ், தமிழர்களுக்கு எதிரான இன வெறியைத் தூண்டும் நோக்கத்துடன் கமல்ஹாசன் உறவாகப் பேசிய செய்திகளை தவறாக சித்தரித்து கர்நாடகத்தில் ஒட்டப்பட்டிருந் ‘தக் லைஃப்’ திரைப்பட சுவரொட்டிகளையும், பேனர்களையும் கிழித்தெறிந்து போராட்டங்களைக் நடத்திக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் கூறி வருகின்றன. கன்னட சினிமா வர்த்தக சபையும் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட அனுமதி கிடையாது எனக் கூறியுள்ளது.

அதற்கும் ஒருபடி மேலே சென்று, கன்னட இனவெறி அமைப்புகளை ஆதரிக்கும் வகையில், அம்மாநில காங்கிரஸ் கட்சியும், முதல்வருமான சித்தராமையா மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோர், கமல்ஹாசனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் திரைப்படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, கமல்ஹாசன் தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதாவது, கமல்ஹாசன் என்ன வரலாற்று ஆய்வாளரா? மொழியியல் வல்லுநரா? தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிந்து இருக்கும். கமல்ஹாசனோ அல்லது வேறு யாராக இருந்தாலும் மக்களின் உணர்வுகளை புண்படுத்த கூடாது. கன்னடம் தமிழில் இருந்து வந்ததற்கான ஆதாரம் உள்ளதா என பல்வேறு கேள்விகளை நீதிபதி நாகபிரசன்னா எழுப்புகிறார்.

அதுமட்டுமின்றி, நானே இந்த திரைப்படத்தை பார்க்கலாம் என நினைத்தேன். ஆனால் இந்த விவகாரத்தால் பார்க்க முடியாது. கமல்ஹாசன் ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும். பேசிய கருத்தை திரும்ப பெற முடியாது. மன்னிப்பு கேட்காவிடில் கர்நாடகாவில் படம் ஓட வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்? மன்னிப்பு ஒன்று தான் தீர்வு. இதுதான் நீதிபதி நாகபிரசன்னாவின் கேள்விகள். அவர் நீதிபதியாக இல்லாமல், ஒரு கன்னடராக இருந்து அக்கேள்விகளை எழுப்பியுள்ளார்.

கமல்ஹாசன் பேசிய விவகாரத்தில், தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் தான், கர்நாடகத்தில் முதல்வர் சித்தராமையாவும், பாஜக மாநிலத் தலைவரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தான் நீதிபதி நாகபிரசன்னாவும் பேசியிருக்கிறார். இது தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை உருவாக்கி தமிழர் எதிர்ப்பை மேலும் மேலும் தூண்டி விடுகின்ற செயலாகும். நீதிபதியாக இருப்பவர்களுக்கு மொழி, இனம், மதம் வேறுபாடு கிடையாது என்பார்கள்.

ஆனால், நாகபிரசன்னா ஒரு கன்னடராக மட்டுமே இருந்து தீர்ப்பளித்துள்ளார். அவரது இனப்பற்றை போற்றுகிறோம். கர்நாடகாவில் இதுவரை தமிழர்களுக்கு நீர் தான் மறுக்கப்பட்டு வந்தது. இப்போது நீதியும் மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், நீதிபதி நாகபிரசன்னா கடந்த கால வரலாற்றை மறந்து விட்டு பேசியுள்ளார்.

கன்னட திரைப்படமான கேஜிஎப் 2 பாகங்கள் உள்ளிட்ட திரைப்படங்கள், தமிழ்நாட்டில் ரூ.100 கோடியை வசூலித்திருக்கிறது. இதனை கன்னட மொழி திரைப்படங்களாக பார்க்காமல், திரைப்படமாக மட்டுமே தமிழர்கள் பார்த்தனர். ஆனால், கமல்ஹாசன் பேசிய விவகாரத்தில் மொழி அரசியலாக பார்க்கப்பட்டிருக்கிறது. எனவே, கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியாக தடை இருக்கும் பட்சத்தில், இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் எந்தவொரும் கன்னட திரைப்படமும் வெளியாகாது. அதே நேரத்தில், தமிழ் திரைப்படத்துறையில் உள்ள சங்கங்கள் முன்வந்து, கர்நாடகாவில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

அப்படி இல்லையென்றால், தமிழ் திரைப்படங்களில் கன்னட நடிகர்களையோ, தொழில்நுட்ப கலைஞர்களையோ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மாபெரும் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். இவ்விவகாரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தங்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விவகாரத்தை பயன்படுத்தி கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், கர்நாடக தமிழர்களின், தமிழ்நாட்டு தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிர்வினையாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எச்சரிக்கையோடு கூறிக்கொள்கிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தனது காதலனை அறிமுகம் செய்த சீரியல் நடிகை!

சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை ஆர்த்தி சுபாஷ்.

யூடியூப் வெப் தொடரில் நடித்து வந்த ஆர்த்தி முதன்முதலில் நடித்த பாண்டவர் இல்லம் தொடர் மூலம் அதிகம் பிரபலமானார்.

பாண்டவர் இல்லம் சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அந்த தொடரும் முடிவுக்கு வர இப்போது விஜய் டிவியிலேயே சிந்து பைரவி என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருந்து வந்த ஆர்த்தி சுபாஷ் தனது காதலரை அறிமுகம் செய்துள்ளார்.

சன் டிவியில் Mr.Manaivi சீரியலில் நாயகனாக நடித்த பவன் ரவீந்திராவை தான் காதலிக்கிறாராம். இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ வெளியாக ரசிகர்கள் இந்த புதிய ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

திருகோணமலையில் வீதிக்கு இறங்கிய மக்கள்!

திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் வைத்து மீனவர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பகுதியில் இன்று (04) காலை பொது மக்களினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குச்சவெளி கடற்பரப்பில் நேற்று (03) மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இதன்போது குச்சவெளி ஜாயாநகரைச் சேர்ந்த 23 வயதுடைய மீனவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் இதுபோன்ற மிலேச்சுத்தனமான தாக்குதலை கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது “பாமர மக்கள்மீது கடுமையான சட்டத்தை திணிக்காதே”, “தீவிரவாதிகள் இல்லை நாம் மீனவ தொழிலாளர்” அடிக்காதே அடிக்காதே மீனவர் வயிற்றில் அடிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ் பருத்தித்துறை வைத்தியசாலையில் அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தினுள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இரு இளைஞர்களையும் பிணையில் செல்ல பருத்தித்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது .

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமது நண்பனை பார்வையிட , வைத்தியசாலையில் பார்வையாளர் நேரம் முடிவடைந்த பின்னர் இரு இளைஞர்களும் சென்றுள்ளனர்.

இதன்போது அவர்களை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வைத்தியசாலைக்குள் அனுமதிக்காத நிலையில் , அவர்களை மீறி உள்நுளைந்துள்ளனர்.

அதனை அடுத்து வைத்தியசாலையில் பணியில் இருந்த பொலிஸார் இருவரையும் தடுத்து நிறுத்திய வேளை அவர்களுடனும் முரண்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் மது போதையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் , இருவரையும் பொலிஸார் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

பருத்தித்துறை பொலிஸார் நீதவான் நீதிமன்றில் இருவரையும் முற்படுத்திய வேளை இருவர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணியின் பிணை விண்ணப்பத்தினை ஏற்ற மன்று, இருவரையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான பிணையில் செல்ல அனுமதித்தது.

யாழில் பல லட்சங்களுக்கு ஏலம் போன முருகனின் மாம்பழம்!

யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது.

புலம்பெயர் தமிழர் ஒருவர் இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுத்துள்ளார். கோட்டையம்பதி சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் நாளான நேற்று மாம்பழத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக முருகனின் மாம்பழம் ஆலய நிர்வாக சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது. இதன் போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்தும் ஆலயத்திற்கு வந்திருந்த அடியவர்கள் குறித்த மாம்பழத்தை வாங்கும் நோக்கில் ஏலத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மாம்பழத்தின் விலை பல இலட்சங்களையும் தாண்டி மாம்பழம் ஏலம் எடுக்கப்பட்டது.

இதன்போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த அ.அகிலன் எனும் அடியவர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் (4,60,000) ரூபாவிற்கு இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுத்திருந்தார்.

இதன் போது ஆலய நிர்வாக சபையினரால் ஏனைய சில பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவர்களுக்கு புதிய நடைமுறை!

பாடசாலை கட்டமைப்பிற்குள் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான தரவுக் கோப்பு தயாரிக்கப்படும் எனவும் ஒரு தனித்துவமான அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும் எனவும் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள கல்வி மாற்றத்தின் கீழ், கல்வித்துறை, கல்விசாரா ஊழியர்கள், சிறுவர்கள் மற்றும் பாடசாலை உட்பட கல்வித்துறையில் உள்ள அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு தேசிய கல்வி தரவு முகாமைத்துவ அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது முடிவு செய்யப்பட்டது.

தேசிய பிறப்புச் சான்றிதழ்கள், தேர்வு முடிவுகள், திறன்கள் உள்ளிட்ட பிள்ளைகளின் அனைத்து தரவுகளையும் இந்த அமைப்பில் சேர்க்க இங்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி மாற்றத்திற்கு ஏற்ப, பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பது, ஆசிரியர் மற்றும் அதிபர் வெள்ளிடங்களை அடையாளம் காண்பது, நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் செய்தல், தொடர்ச்சியான மதிப்பீட்டு முறையை செயல்படுத்துதல் மற்றும் பாடசாலை பௌதீக வளங்களை மேம்படுத்துதல் போன்ற செயல்முறைகளை இந்த தரவு அமைப்பு எளிதாக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தாண்டு முதலாம் ஆண்டு முதல் மற்றும் 6ஆம் ஆண்டு வகுப்புகளில் சேரும் மாணவர்களின் அடிப்படையில் இந்த தரவு அமைப்பைத் தொடங்குவது குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வி தரவு மேலாண்மை அமைப்பின் வளர்ச்சிக்கு தேவையான ஆதரவை இலங்கை விமானப்படையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு வழங்கும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா?

மின்சார கட்டணம் 18% ஆல் அதிகரிக்குமா என்பதை தெரியப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று(03.06.2025) உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணம்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், IMF விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் அடுத்த கட்ட தவணையைப் பெற மின்சாரக் கட்டணத்தை 18% ஆல் அதிகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

இந்த தகவல் உண்மையா என்பதை தெரியப்படுத்துங்கள்.மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிக்குமா என்பதையும் அறியத்தாருங்கள்.

மேலும், IMF இன் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் அடுத்த தவணை கிடைக்கப்பெரும் திகதி யாது என்பதையும் தெரியப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டு இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் மாரடைப்பு!

இலங்கை மற்றும் பிற தெற்காசிய நாடுகளில், இளைஞர்கள் மத்தியில், மாரடைப்புஅதிகரித்து வருவது தொடர்பில், முக்கிய விடயங்கள் பகிரப்பட்டுள்ளன.

25 ஆண்டுகளுக்கும் மேலாக இருதயநோய் நிபுணராக சேவையாற்றும், கோட்டாபய ரணசிங்க இந்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ஒரு காலத்தில் 40 வயதுக்குட்பட்டவர்களில் அரிதாக இருந்த மாரடைப்பு, இப்போது மிகவும் பொதுவானதாகிவிட்டது.

ஒவ்வொரு மாதமும், 20 மற்றும் 30 வயதுகளில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களை தாம் சந்திப்பதாக கூறும் அவர், அதில் பலர் உடல் பருமன் அல்லது குடும்ப வரலாறு போன்ற பாரம்பரிய ஆபத்து காரணிகள் இல்லாமல், மாரடைப்புக்கு உள்ளாகியுள்ளதை காண முடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்படியானால் இந்த நிலைமைக்கு, நவீன வாழ்க்கை முறை உள்ளது. குறிப்பாக, மோசமான உணவு, உடல் செயலற்ற தன்மை, நாட்பட்ட மன அழுத்தம் மற்றும் போதுமான தூக்கமின்மை என்பன மாரடைப்புக்கான முக்கியம் மூல காரணங்களாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வாரத்துக்கு குறைந்தது ஐந்து நாட்கள் 40 நிமிடங்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். இதற்கு ஜிம் தேவையில்லை. நடைபயிற்சி என்பது உங்கள் இதயத்தைப் பாதுகாக்க எளிமையான மற்றும் மிகவும் சக்திவாய்ந்த பழக்கமாகும்.

நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நடனம் போன்ற பிற செயல்பாடுகளும் சிறந்தவை என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.

அசாதாரண சோர்வு, படபடப்பு
தூக்கமின்மை ஒரு முக்கிய இருதய ஆபத்து காரணி என்பதை பலர் உணரவில்லை. மோசமான தூக்கம் மன அழுத்த ஹோர்மோன் அளவை (கார்டிசோல் போன்றவை) அதிகரிக்கிறது.

குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது மற்றும் தமனிகளை சேதப்படுத்துகிறது ஆகவே ஒரு இரவுக்கு குறைந்தது 7 மணிநேரம் தரமான தூங்குங்கள். இது ஒரு மருத்துவத் தேவையாகும் என்று மருத்துவர் ரணசிங்க வலியுறுத்தியுள்ளார்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைக் குறைக்க வேண்டும். விதை எண்ணெய்களைத் தவிர்த்து, தேங்காய் எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெயை உட்கொள்ளவும்.

உங்கள் உணவில் இருந்து மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நீக்கவும். இந்த நிலையில், அசாதாரண சோர்வு, படபடப்பு அல்லது மார்பு இறுக்கம் ஏற்பட்டால், அவற்றை புறக்கணிக்காதீர்கள் என்றும் இருதயநோய் நிபுணராக சேவையாற்றும், கோட்டாபய ரணசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

இன்றைய ராசிபலன்கள்04.06.2025

மேஷம்

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொட்டது துலங்கும் நாள்.

ரிஷபம்

பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்தது நிறைவேறும் நாள்.

மிதுனம்

அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்ப்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கடகம்

உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியும் கூடும் நாள்.

சிம்மம்

இதுவரை இருந்த காரியத்தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். நன்மை நடக்கும் நாள்.

கன்னி

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். நண்பர்கள் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்‌. கவனம் தேவைப்படும் நாள்.

துலாம்

சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வாகனத்தில் அதிக கவனம் தேவை. கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகள் கலந்து கொள்வீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். இனிமையான நாள்.

தனுசு

பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். சாதிக்கும் நாள்.

மகரம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். நல்லன நடக்கும் நாள்.

கும்பம்

சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். கவனம் தேவைப்படும் நாள்.

மீனம்

சவாலாக தெரிந்த சில வேலைகள் சாதாரணமாக முடியும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். மகிழ்ச்சியான நாள்.

விசாரணைக்கு வரும் ரணிலின் வழக்கு!

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மதுபான வரிச் சட்டத்தை மீறி புதிய மதுபான உரிமங்களை வழங்கி நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது முன்னாள் நிதியமைச்சர் என்ற வகையில் தாக்கல் செய்த இரண்டு மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜூலை 26, 2024 முதல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற செப்டம்பர் 24, 2024 வரை இரண்டு மாதங்களுக்குள் வழங்கப்பட்ட மதுபான உரிமங்கள் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உயர் நீதிமன்றம் கலால் ஆணையர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று (03) யசந்த கோடகொட, ஜனக் டி சில்வா மற்றும் ஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கலால் ஆணையர் எம்.ஏ. குணசிறி, மேலதிக கலால் ஆணையர் ஏ.எம்.பி. அரம்பலா, துணை ஆணையர்கள் சி.ஜே.ஏ. வீரக்கொடி, யு.டி.என். ஜெயவீர, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, இலஞ்ச ஊழல் ஆணையத் தலைவர் உள்ளிட்ட 39 பேர் குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட 2024 ஜூலை 26 முதல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற 2024 செப்டம்பர் 21 வரை, கலால் சட்டத்தின் விதிகளை மீறி பிரதிவாதிகள் பல மதுபானசாலை உரிமங்களை வழங்கியுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி மனுதாரர்கள் மனுவை விசாரிக்கவும் அனுமதி கோரினர்.

இதற்கமைய முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட பின்னர், தொடர்புடைய உத்தரவைப் பிறப்பித்த உயர் நீதிமன்றம், மனுவை விசாரிக்க முடிவு செய்தது.

கிளிநொச்சியில் தாய் மற்றும் மகனின் மோசமான செயல்!

கிளிநொச்சி பிரதேசத்தில் குடு போதைப் பொருளுடன் தாயும் மகனும் கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பனங்கண்டி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டு சூழலை பொலிசார் சோதனை இட்ட பொழுதே தாயும் மகனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

டயர் ஒன்றினுள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 23 கிராம் 75 மில்லி கிராம் நிறை உடைய குடு எனும் போதைப்பொருள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய தாயும் மகனும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கைதான தாயும் மகனும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்

புதிய சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (03) வரலாற்றில் மிக உயர்ந்த நிலையை எட்டியது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 17,214.39 புள்ளிகளாக பதிவாகியதுடன், இது 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி பதிவான முந்தைய அதிகபட்சமான 17,193.8 புள்ளியை முறியடித்துள்ளது.

இன்று, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 234.50 அலகுகளாக பாரியளவு அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்கு விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு இதற்கு காரணமாவதுடன், கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி, DFCC வங்கி, சென்றல் பினேன்ஸ் மற்றும் ஹட்டன் நஷனல் வங்கி ஆகியவற்றின் பங்கு விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு இதற்கு அதிக பங்களிப்பை வழங்கியது.

பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 7.37 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.