ஹிட்லருடன் டிரம்பை ஒப்பிட்டு பாடம் நடத்திய ஆசிரியர் சஸ்பெண்டு

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை அமெரிக்காவில் உள்ள ஒரு பிரிவினர் ஏற்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்ப் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார். அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு மற்றும் பெண்கள் அவமதிப்பு உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. அதுவே அவர் மீதான எதிர்ப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மவுன்பெய்ன் வியு உயர்நிலைப் பள்ளியில் பிராங்க் நவாரோ என்ற வரலாற்று பாட ஆசிரியர் பாடம் நடத்தினார்.

அப்போது ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லருடன் டிரம்பை ஒப்பிட்டார். ஜெர்மனியை மீண்டும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்வேன் என ஹிட்லர் தெரிவித்தார். அதே போன்று, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்பும் அமெரிக்காவை மீண்டும் பெரிய அளவில் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வேன் என உறுதி அளித்துள்ளார் என்று மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

இது குறித்து அந்த ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் கூறினர். ஹிட்லருடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை ஒப்பிடுவதா? என கண்டித்தனர்.

இதை தொடர்ந்து வரலாற்று பாட ஆசிரியர் பிராங்க் நவாரோவை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்டு (தற்காலிக பணிநீக்கம்) செய்தது.

சனி பெயர்ச்சி பலன்கள் 2017-2020 வரை உங்களுக்கு எப்படி ? அடுத்தவருவதை அறிய ஆர்வமா!

வருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்அ தீமைகளை வெளிக்காட்டியுள்ளது….

எந்த எந்த ராசிகளுக்கு சனி பெயர்ச்சி சாதகம் யாருக்கு பாதகம்…

எத்தனை ஆண்டுகள் எப்படி பயணிக்கப் போகிறது…astro

யாழ் தேவியை காப்பாற்றிய கண் பார்வையற்ற நபர்! பேராபத்திலிருந்து தப்பிய ஆயிரக்கணக்கான மக்கள்

காங்கேசன்துறையில் இருந்து காலிக்கு பாரிய அளவிலான பயணிகளுடன் பயணித்த யாழ்தேவி ரயிலுக்கு ஏற்படவிருந்த பாரிய விபத்தை நபர் ஒருவர் தடுத்துள்ளார்.

வடக்கு ரயில் வீதியின் 108 3/4 கிலோ மீற்றர் மைல் கல் அருகில் ரயில் பாதை இராண்டாக உடைந்திருந்த நிலையில் ஏற்படவிருந்த விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இதனை அவதானித்த நபர் ஒருவர் சிவப்பு நிறத்திலான துணியை ரயிலை நோக்கி அசைத்து ஆபத்தினை தெரியப்படுத்தினார். இதனை உணர்ந்து கொண்ட ரயில் சாரதியை ரயிலை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார்.

தம்புக்த்தேகமவில் வசிக்கும் அங்கவீனமுற்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே பாரிய அனர்த்தத்தை தடுத்துள்ளார்.

வெளிநாட்டில் இடம்பெற்ற விபத்தொன்றில் கண்களை இழந்த 44 வயதான W.விஜித என்ற நபர் திறமையாக செயற்பட்டமையால் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற முடிந்துள்ளது.

நேற்று மாலை 3.25 அளவில் பௌணர்மி என்பதனால் விகாரைக்கு செல்வதற்காக வடக்கு ரயில் பாதை ஊடாக பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், வடக்கு ரயில் பாதையின் 10 இலக்கம் பெதிவெவ கிராமத்திற்கு அருகில் (தபுத்தேகம மற்றும் சேனரத்கம ரயில் பாதைக்கு இடையில்) ரயில் பாதை கிட்டத்தட்ட 3 அடி அளவில் உடைந்து பிரிந்து சென்றிருந்தனை கண்ட மக்கள் இது தொடர்பில் பொலிஸ் அவசர இலக்கத்தில் உடனடியாக அறிவித்துள்ளனர்.

அந்த அறிவிப்பு மேற்கொண்டு சில நிமிடங்கள் செல்வதற்கு முன்னர் பயணிகளை ஏற்றிக் கொண்டு தபுத்தேகமயில் இருந்து செனர்த்கம நோக்கி வேகமாக பயணித்த ரயில் ஒன்றின் சத்தத்தை கேட்ட விஜத, உடனடியாக தனது வீட்டிற்கு சென்று சிவப்பு நிறத்திலான ஆடை ஒன்றை எடுத்து வந்து ரயில் வீதியில் விபத்தொன்று ஏற்படும் என்பதனால் ரயில் உடனடியாக நிறுத்துமாறு ரயில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை அசைவுகளை மேற்கொண்டுள்ளார்.

ஆபத்தென்பதனை அறிந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.. ரயிலை நிறுத்திய சாரதி உட்பட அதிகாரிகள் ரயில் பாதையை அவதானித்த போது ரயில் பாதையின் ஒரு பகுதி உடைந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த நபர் சரியான நேரத்தில் இந்த ரயிலை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் பாரிய விபத்தொன்று ஏற்பட்டிருக்கும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் கிட்டத்தட்ட 2500 மேற்பட்ட பயணிகள் யாழ்தேவியில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரூபாய் நோட்டுகளினால் விவசாயி தற்கொலை!

தமிழகத்தில் உள்ள பஞ்சாலை ஒன்றில் தொழிலாளிகளாக வேலை பார்ப்பவர்கள் சுனில் (வயது 22), அனில் (20). அண்ணன், தம்பிகளான இருவரும் சத்தீஸ்கார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 8-ந் திகதி மத்திய அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால், சுனில் மற்றும் அனிலுக்கு ஊதியம் கொடுக்காமல் ஒப்பந்தகாரர் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.

இதனால் சகோதரர்கள், சொந்த ஊர் திரும்ப கூட பணம் இல்லாமல் சிரமப்பட்டனர்.

இதனையடுத்து சத்தீஸ்கார் மாநிலம் மகாராஜ்புரில் உள்ள தங்கள் தந்தை ரவி பிரதானுக்கு (45) போன் செய்து, தங்களுக்கு பணம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டனர். ரவி பிரதான் விவசாயம் பார்த்து வந்தார்.

இதனையடுத்து வீட்டில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக அருகில் உள்ள வங்கிக்கு ரவி பிரதான் சென்றார்.

அங்கு நீண்ட வரிசையில் தொடர்ந்து 2 நாட்களாக காத்திருந்தும் அவரால் ரூபாய் நோட்டை மாற்ற முடியவில்லை.

சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கும் மகன்களுக்கு ரூபாய் நோட்டுகளை மாற்றி பணம் அனுப்ப முடியாத விரக்தியில் விவசாயி ரவி பிரதான், தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சத்தீஸ்கார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுபான்மை மக்கள் மீது இனவாத தாக்குதலை மேற்கொண்ட பிக்குவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தமிழ் மக்களின் காணியில் சிங்கள குடியேற்றத்தை நிறுவ மேற்கொண்ட முயற்சியை தட்டிக்கேட்ட தமிழ் அதிகாரிளை தகாத வார்த்தைகளால் திட்டியது மட்டுமன்றி, புலி முத்திரையும் குத்திய மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகம் முன்னால் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்களை கையகப்படுத்தி சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதற்கு குறித்த பிக்கு முயற்சித்ததையடுத்து, குறித்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக அண்மையில் கெவிலியாமடு கிராமசேவகர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் சிலர் அங்கு சென்றிருந்தனர்.

இதன்போது வெகுண்டெழுந்த குறித்த பிக்கு, பொலிஸார் முன்னிலையிலேயே அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தமிழ் மக்கள் அனைவரும் புலிகள் என குறிப்பிட்டு கூச்சலிட்டார்.

புத்த பெருமானின் அஹிம்சை போதனைகளை கடைப்பிடிக்கும் வழித்தோன்றல்களாக கருதப்படும் பிக்குகள் இவ்வாறு செயற்படுவது அனைத்து மக்கள் மத்தியிலும் வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச் சம்பவத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியே இன்றைய ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

ஆட்கடத்தலும் சித்திரவதைகளும் படையினரின் மரபணுக்களில் உறைந்துபோயுள்ளன: யஸ்மின் சூக்கா

இலங்கையில் ஆட்கடத்தலும் சித்திரவதைகளும் இராணுவம் உள்ளிட்ட அரச படையினராலும் புலனாய்வுப் பிரிவினராலும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, இலங்கை படையினரின் மரபணுக்களின் இவ்வாறான செயல்கள் ஆழமாக உறைந்துபோயுள்ளதென குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வெள்ளைவான் கடத்தல்களும் சித்திரவதைகளும் தொடர்வதோடு, வதை முகாம்களும் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள சூக்கா, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்து இவ்விடயங்கள் குறித்து நீதியான விசாரணையை முன்னெடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுவின் 59ஆவது கூட்டத்தொடரில், இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை தொடர்பாக ஆராயப்படவுள்ளது. இந்நிலையிலேயே யஸ்மின் சூக்கா இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்புத் தரப்பினரும் தொடர்ந்தும் தமிழ் மக்களை இலக்குவைப்பதோடு, அவர்களைக் கடத்தி சட்டவிரோத முகாம்களின் தடுத்து வைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்துவதற்கும், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்துவதற்கும் காரணம், குற்றவாளிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமையே என யஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இவ்வாறான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட 36 தமிழர்களிடம் ஐரோப்பிய நாடுகளில் வைத்து சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ள சூக்கா, போர்க்குற்றங்கள் மற்றும் போருக்கு பிந்திய காலங்களில் இடம்பெற்ற கொடூரங்கள் தொடர்பாக இதுவரை சுமார் 200 இலங்கையர்களின் சாட்சியங்கள் தமது அமைப்பிடம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான கூட்டு ஆட்சியிலும் இக் குற்றங்களை தடுத்து நிறுத்த முடியாமல் உள்ளதென யஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளதோடு, சர்வதேசத்திற்கு அளித்த மனித உரிமைகள் தொடர்பான வாக்குறுதிகளை மதித்து இலங்கை அரசாங்கம் செயற்படுவது அவசியமென வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் சித்திரவதைகளும் கடத்தல்களும் தொடர்கின்றன என்பதை மையமாகக் கொண்டு, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுவிற்கு ஏற்கனவே இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையொன்றை அனுப்பி வைத்திருந்தது. எனினும், குறித்த அறிக்கையில் காணப்படும் விடயங்களை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தேவையான ஊட்டசத்து உணவுகள்

பொதுவாக பெண்களுக்கு இயற்கையாகவே மாதவிலக்கு சுழற்சியின் காரணமாக பலவகையான சத்துக்குறைபாடுகள் உண்டாகிறது. இத்தகைய சத்துக் குறைபாட்டால் உடல் பலவீனமடைந்து பாதிப்படைகிறது. இதனால் பெண்களுக்கு கூடுதல் ஊட்டசத்து தேவைப்படுகிறது.

நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் பெண்களுக்கு பருவம் எய்தியவுடன் வீட்டில் இருக்க வைத்து உடலுக்கு வலு கொடுக்கும் உணவுகளைக் கொடுத்து, மாதவிலக்கு காலங்களில் போதிய ஓய்வும் கொடுத்து வந்தனர். ஆனால், இன்றைய சூழலில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஓய்வு என்பது கிடையாது. மேலும் உணவு தயாரித்து அதை சாப்பிடக்கூட நேரமில்லாமல் அவசர அவசரமாக கிளம்பி பயணத்தின் போதே சாப்பிடுகின்றனர், அல்லது பட்டினி கிடக்கின்றனர்.

மேலும் மாதவிலக்கு காலங்களில் 3 அல்லது 5 நாட்கள் தனியாக அமர வைத்து, எந்த வேலையும் செய்யவிடாமல், ஓய்வு கொடுத்தனர். அதை நாம் தவறாக புரிந்து கொண்டுள்ளோம். அந்த காலங்களில் போதிய ஓய்வு தேவை என்பதாலேதான் அவ்வாறு செய்தனர் என்பதனை உணரவேண்டும்.

போதிய சத்து குறைப்பாட்டால் குடலில் புண், பித்தம், அஜீரணம், தலைவலி, கை, கால் வலி, இடுப்பு, முதுகு வலி போன்றவற்றை ஏற்படுத்துகிறது. மேலும் உடல் அசைவில்லாமல் கணனி முன் அதிக நேரம் அமர்ந்திருந்து வேலை பார்ப்பவர்கள் இரவுப் பணி, குறைவான தூக்கம், மன அழுத்தம் இவைகளாலும் பெண்களின் உடல் பாதிப்படைகிறது. இத்தகைய பாதிப்புகள் பின்னாளில் பெரிய நோய்களாக மாறிவிடும்.

இத்தகைய உடல் பிரச்சனைகளில் இருந்து விடுபட இவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு எடுத்து கொள்வது அவசியமாகும். அதற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை வாங்கி உண்பது நல்லதல்ல. அவை உடலுக்குத் தீங்கிழைக்கக் கூடியவையாக உள்ளது.

நம்முடைய அன்றாட உணவில் கீரைகள், காய்கள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பலபேர்களின் பிரச்சனைகளில் ஒன்று சிறுநீரை அடக்குவது அல்லது சிறுநீர் கழிவதைத் தடுக்க தண்ணீர் அருந்தாமல் இருப்பது போன்றவற்றை தவிர்த்து நன்கு நீர் அருந்த வேண்டும். முளை கட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

உணர்ச்சிக்கு ஏற்ப விரியும் கருவிழி

நம் கருவிழி ஒளிக்கு மட்டுமல்லாது, உடலின் உள்ளே நடக்கும் உணர்ச்சி மற்றும் மன மாற்றங்களாலும் விரிகிறது. கருவிழியின் அளவைக் கொண்டு உளவியல் சார்ந்த விஷயங்களை விஞ்ஞானிகள் அலசுகின்றனர். கண்கள் விரிவதற்கான காரணம் தெரியாமலேயே இவையனைத்தும் செய்து கொண்டிருக்கின்றன.

நாம் பார்க்கும் படங்களைப் பின்னந்தலையில் இருக்கும் பார்வைப்புறணி என்ற பகுதி ஒன்று சேர்க்கிறது. நரம்பு மண்டலத்தின் மற்றொரு பகுதி, கருவிழியை சரிப்படுத்தும் பணியைச் செய்கிறது. இந்தப் பகுதி, இதயத் துடிப்பு, வியர்த்தல் போன்று நம் உணர்வுக் கட்டுப்பாட்டில் அல்லாத செயல்களை செய்கிறது. மேலும் ஒளியின் அளவைப் பொருத்து கருவிழிப்படலத்தின் இயக்கத்தை நிர்ணயிக்கும் பணியையும் செய்கிறது.

கருவிழிப்படலம் இரு வகை தசைகளால் ஆனது. முதலாவது வெளிச்சமான சூழலில், கருவிழியைச் சுற்றியிருக்கும் வட்ட வடிவ இறுக்குத் தசை. இத்தசை 2 மில்லி மீட்டர் வரை சுருங்கக் கூடியது. இரண்டாவது, இருட்டில் பார்க்க உதவும் விரிவுத் தசைகள். இவை கருவிழியை 8 மில்லி மீட்டர் வரை விரிய உதவுகின்றன. கருவிழி விரியும் அளவையும் சுருங்கும் அளவையும் அளப்பது ப்யூபில்லோமெட்ரி என்று அழைக்கப்படுகிறது.

இந்த அளவு மனிதனின் உணர்வு சார்ந்த மற்றும் அறிவு சார்ந்த செயல்பாடுகளுக்கு விடையளிக்கிறது. புரிதல்சார் நிகழ்வுகளும் உணர்வுப் பூர்வமான நிகழ்வுகளும் கருவிழிச்சுருங்குவதற்கும், விரிவதற்கும் காரணமாக இருக்கின்றன. சில மில்லி மீட்டர் அளவே நடக்கும் இந்தச் செயல்பாட்டை அகச்சிவப்பு புகைப் படக்கருவி கொண்டு கண்காணிக்க முடியும். இதன் மூலம் மனம் சார்ந்த பிரச்சினைகளை கண்டுபிடிக்க முடியும்.

கருவிழி விரியும் அளவைக் கொண்டு ஆட்டிசம், மன இறுக்கம், மனச் சோர்வு போன்ற பல பிரச்சினைகளைக் கண்டுபிடிக்க முடியும். கருவிழி விரிதலைக்கொண்டு ஒருவர் எடுத்திருக்கும் முடிவை முன் கூட்டியே தெரிந்து கொள்ளமுடியும் என்று உல்ப்கேங் ஐன்ஹாசர்டிரேயர் எனும் நரம்பியல் நிபுணர் மற்றும் அவரது குழு நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. ஜெர்மனியின் பிலிப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பங்கு பெற்றவர்களை 10 நொடிக்குள் ஒரு பொத்தானை அழுத்தச் சொன்னார்கள். பொத்தானை அழுத்தும் முன்பு கருவிழி விரிய ஆரம்பித்ததென்றும் அழுத்திய 2 விநாடிகளுக்கு பின் அதீத விரிவு நிலையை அடைந்தது என்றும் பதிவானது.

“ப்யூபில்லோமெட்ரியின் செயல்பாடு வரையறுக்கப்பட்டது என்பதால் அதைக் கொண்டு அனைத்து புரிதல் சார்ந்த செயல்களையும், உணர்ச்சி சார்ந்த செயல்களையும் அடையாளம் காண முடியாது. எனினும் உளவியல் ஆய்விற்கு மிகுந்த உதவியாக இருக்கும்” என்று, பிட்ஸ்பர்க் மருத்துவக் கல்லூரியின் உயிர் அளவியல் ஆராய்ச்சிக் கூடத்தின் மேலாளர் ஸ்டூவர்ட் ஸ்டீன்ஹார் கூறுகிறார்.

மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மத வழிபாடு நிகழ்வொன்றில் கலந்து கொண்டார். இதன்போது பெண்ணொருவர் அவருக்கு அதிர்ச்சி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்குரஸ்ஸ, அல்கிரிய, கஹவில்கொட விகாரையில் இடம்பெற்ற மத வழிப்பாட்டில் மஹிந்த கலந்து கொண்டார். இதன்போது அந்தப் பகுதியை சேர்ந்த மக்களும் பங்கேற்றிருந்தனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த மக்களால் மஹிந்தவுக்கு விசேட வரவேற்பு ஒன்று வழங்கப்பட்டது. மத வழிபாட்டு நிகழ்வுகளை அடுத்து, அங்கிருந்த மக்களுடன் மஹிந்த ராஜபக்ச சந்திப்பில் ஈடுபட்டார்.

இதன்போது பெண் ஒருவர் கூச்சலிட்டு வெளியிட்ட கருத்து பலரின் அவதானத்தை பெற்றுள்ளது. மஹிந்தவை பார்த்து குறித்த பெண் திடீரென “வணக்கம் அரசரே, ஐயோ வாருங்களேன்” என பெரிய சத்தமாக கூச்சலிட்டுள்ளார்.

சிறுநீரகத்தை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்படும் கொத்தமல்லி!

சிறுநீரகத்தின் வேலை ரத்தத்தில் கலந்திருக்கும் தேவையற்ற உப்புகளை நீக்கி அந்த உப்பை எல்லாம் சிறுநீர் வழியாக வெளியேத்துறது தான்.

வெயில் காலத்துல உடம்பில் இருக்குற நீரெல்லாம் வியர்வையாகவே ஆவியாகிறது.

இதனால் உப்புகள் எல்லாம் சிறுநீரகத்தில் தங்குகிறது இதனால்தான் கல் உருவாகிறது.

நமது இரத்ததில் உள்ள உப்பு சத்து மற்றும் தேவையற்ற பாக்டீரியா நுழைவதை தடுக்கும்.

இங்கே மிகவும் எளிமையான கிடைக்ககூடிய கொத்தமல்லியை கொண்டு சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க முடியும்.

சிறுநீரகத்தில் உள்ள கற்களை எவ்வாறு அகற்றுவது என்பதனை பார்ப்ப்போம்…

கொத்தமல்லி சாறு தயாரிக்கும் முறை:

ஒரு கப் அளவுள்ள கொத்தமல்லியை நன்கு சுத்தம் செய்து நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி பிறகு ஆறவைத்து வடிகட்டி கொள்ள வேண்டும்.

பின்னர் சுத்தமான பாட்டிலில் ஊற்றி அதனை குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து வைக்க வேண்டும்.

இதனை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நாளடைவில் சிறுநீரகத்தில் உள்ள கல் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறும்.

இவ்வாறு தொடர்ந்து குடிக்கும்போது வித்தியாசத்தை நன்கு உணர முடியும்.

அனைவரும் அறிந்த கொத்தமல்லி சிறந்த மருத்துவ மூலிகையாகும். சிறுநீரகத்தை சுத்தம் செய்யவதில் இதன் பங்கு அற்புதமானது.

மேலும் இது இயற்கையாக விளையும் பொருள் என்பதால் வேறு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. நீங்களும் இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.

தனுஷின் வருகையால் வருங்கால கணவனுடன் சண்டை போட்ட நடிகை த்ரிஷா..?

கடந்த ஜனவரி மாதம் நடிகை த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளர் தொழில் அதிபர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அவ்வளவு தான், அதற்கு அப்புறம்…திருமணம் நின்றுபோனது.

நடிப்புக்கு தடை போட்டதால் திருமணம் நின்றது என்று த்ரிஷா தற்போது காரணத்தை சொல்லியுள்ளார்.

ஆனால், கோலிவுட்டில் எப்போதும் போல் தனுஷை இந்த விவகாரத்தில் இழுத்து வைத்து பேசுகிறார்கள். தனுஷே ஒரு கட்டத்துக்கு மேல் நம்ப ஆரம்பிக்கும் அளவுக்கு…அவர் தான் காரணம் என்று கோலிவுட் பாட்ஸிகள் பரப்புகின்றன.

தனுஷும், த்ரிஷாவும் நீண்ட கால நண்பர்கள்.தனுஷை நிச்சயதார்த்த பார்ட்டிக்கு அழைத்தாராம் த்ரிஷா. ஆனால் தனுஷை விழாவில் பார்த்த மாப்பிள்ளை த்ரிஷாவிடம் கடுப்பானாராம்.

‘என் நண்பர்களை எப்படி விட்டு தருவது ?” என்று இவர் கேட்க…அங்கு வந்த மாப்பிளை அப்பா ,’என்ன பிரச்சனை?” என்று கேட்க…”உங்க வேலை இது இல்லை” என்று த்ரிஷா கடுப்படிக்க…”எங்கப்பாவையே இப்படி பேசுறியா?ன்னு அங்க வெடிச்ச பிரச்சனை தான் …திருமணம் நின்னு போக காரணமாம்.

படுகவர்ச்சியாக ‘தமன’ நடிகை!

முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் இன்னமும் இருந்து கொண்டிருக்கும் ‘தமன’ நடிகை, ‘ம்பு’ ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இன்னொரு மூன்றெழுத்து நடிகையும் இருக்கிறார். எந்த வகையிலும், அந்த மூன்றெழுத்து நடிகை கவனத்தை ஈர்த்து விடக்கூடாது என்பதில் ‘தமன’ நடிகை எச்சரிக்கையாக இருக்கிறாராம்.

இதற்காகவே அவர் படத்தில் படுகவர்ச்சியான உடைகளில் தோன்றுகிறாராம். ரசிகர்களுக்கு நல்ல வேட்டை!

இலங்கையின் பூர்விக வரலாறு! இதை படித்தால் தமிழர் யார் என்று புரியும்!

01.உலக மொழிகளில் ஆதிமொழி தமிழ் .இதை ஆங்கிலேயர்களே ஆராட்சி மூலம் நிறுவியும் ஏற்றும் கொண்டுள்ளனர்.ஆகவே ஆதிக்குடியினம் தமிழினம் .தமிழன் தான் ஒரு நாட்டில் முதலில் குடியேறுவான் .

02. சிங்களவரின் தமது வரலாற்றை மகாவம்சத்தை வைத்தே நிறுவுகின்றனர் .இது மகாநாம தேரர் என்னும் பௌத்த பிக்குவினால் அதுவும் பாளி மொழியில் கி.பி. 5 ம் நூற்றாண்டில் எழுதினார் .இதில் உண்மைகள் கற்பனைகளுக்கு மேலே தூவப்பட்டிருக்கின்றன .

03.மகாவம்சத்தின்படி படி கி.மு.543 இல் இன்றைய பெங்கார் ,ஒடிஷா மாநில பகுதிகளிலிருந்து ஒரு சிறிய நாட்டின் அடங்காத கடடாக்காலி இளவரசனை அவனது தந்தை 700 நண்பர்களுடன் சேர்த்து நாடு கடத்தினார் .

04.அந்த பாய்மரக்கப்பல் நாகதீப என்றழைக்கப்படும் இன்றைய இலங்கையை வந்தடைந்தது .-மகாவம்சம்

05.அந்த இளைஞன் விஜயன் ,குவேனி என்னும் நாக இளவரசியை மணந்தாள் -இவர்களின் வழித்தோன்றல்களே சிங்களவர்கள்

மகாவம்சம் மறைக்க முற்பட்டு முடியாமல் போன தமிழர் கதை ……………

01.மஹாவம்சப்படி …….வியஜன் இலங்கைக்கு வந்த பொது மக்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் .அவர்கள் யார் ?
* பழந்தமிழ் பேசிய திராவிடர்கள் .

02.இயக்கர் நாகர் வேடர் என மூன்றின மக்கள் விஜயனுக்கு முன்னரே இலங்கையில் வாழ்ந்திருக்கிறார்கள் .அவர்கள் திராவிடர்கள் .அவர்கள் பேசிய மொழி என்ன ?
* அவர்கள் ஒருவகை பழந்தமிழை பேசினார்கள் .

03.1956 ம் ஆண்டு விஜயன் இலங்கையில் கால் பதித்த2000 ம் ஆண்டை நினைவு கூற இலங்கை ஒரு தபால் தலையை வெளியிட்ட்து .பின்னர் அது உடனே திரும்பப்பெறப்படாது ஏன் ?
*தமது மூதாதையன் என கொண்டாடும் வியஜன் இலங்கையின் பூர்விக குடிமகன் இல்லை என்பதால் …அந்த முத்திரை வெளியீடு அதை தாமே ஒப்புக்கொள்ளவைத்தாய் இருக்கும் என்பதால்…

இன்னும் தெளிவாக அறிய ……இந்த வீடியோவை கேளுங்கள்

கின்னஸ் சாதனை படைத்த தமிழன்

போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஒரே நாளில் 10,975 கிலோ பொருட்களை சேகரித்து தமிழர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

திருநெல்வேலியை சேர்ந்த வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்தி(52) கடந்த 1992-ம் ஆண்டு முதல் துபாயில் ஆடிட்டராகப் பணி புரிந்து வருகிறார். ஆடிட்டராகப் பணி புரிந்தாலும் சமூக சேவையில் கிருஷ்ணமூர்த்திக்கு அதிக அக்கறையுண்டு. இதற்காக அனைவருக்கும் கல்வி என்ற அறக்கட்டளை ஒன்றை கிருஷ்ணமூர்த்தி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் 10,975 கிலோ கல்வி உபகரணப் பொருட்களை ஒரே நாளில் சேகரித்துக் கொடுத்ததற்காக கிருஷ்ணமூர்த்தியின் பெயர் உலக சாதனைகளுக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

கடந்த மாதத்தில் கிருஷ்ணமூர்த்தி சிரியா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஒரே நாளில் 50,000 ஆயிரம் நோட்டுப் புத்தகங்கள், 3 லட்சம் பென்சில்கள், 2000 ஆயிரம் ஸ்கூல் பேக்குகள் உட்பட 10,975 கிலோ எடையுள்ள பொருட்களைத் திரட்டினார். இதற்காக அவரின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

கிருஷ்ணமூர்த்தி திரட்டிக் கொடுத்த பொருட்களை எமிரேட்ஸ் ரெட் கிரசன்ட் என்ற அமைப்பு பாதிக்கப்பட்ட அகதிக் குழந்தைகளுக்கு விநியோகம் செய்யவுள்ளது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் 2015-ம் ஆண்டு சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் 4,571 கிலோ பொருட்களை திரட்டிக் கொடுத்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது.

அமெரிக்கர்கள், இலங்கையை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்!

Waving flag of Sri Lanka and USA

ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளை ஏற்றுக் கொண்ட, இலங்கையை அமெரிக்கா முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற போது, எவரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மகிந்த ராஜபக்ச சுமுகமான அதிகார கைமாற்றத்தை உறுதிப்படுத்தினார்.

ஆனால், அமெரிக்காவில் அண்மைய அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற ஹிலாரி கிளின்டனின் ஆதரவாளர்கள், டொனால்ட் ட்ரம்பை அதிபராக ஏற்க முடியாது என்று தெரிவித்து, எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

இலங்கையில் 2015 அதிபர் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாக முன்னரே, தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து சுமுகமாக அதிகாரத்தை கைமாற்றுவது குறித்து மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்தினார்.

மகிந்தவுக்கு ஆதரவாக இராணுவத்தினர் புரட்சியில் ஈடுபட்டு சிறிசேன அதிகாரத்துக்கு வருவதை தடுக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின.

எனினும் எந்த புரட்சியும் இடம்பெறவில்லை. ராஜபக்ச தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொண்டு, பதவியை விட்டு விலகிச் சென்றார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கையை முன்கூட்டியே கணித்த ஆற்காடு பஞ்சாங்கம்

சேலம்:

கடந்த 10 ஆண்டுக்கு முன்பு சுனாமி தாக்கியதை ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கம் முன்கூட்டியே கணித்து வெளியிட்டு இருந்தது.

கடந்த மார்ச் மாதம் துர்முகி வரு‌ஷத்திய ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் சர்வமுகூர்த்த பஞ்சாங்கத்தை ஆற்காட்டை சேர்ந்த ஜோதிடர் கே.என்.நாராயணமூர்த்தி கணித்து வெளியிட்டு இருந்தார். இதில் தமிழ்நாட்டில் ஆளும்கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிஅமைக்கும் என்று கூறி இருந்தார்.

அதன்படி ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் அமைத்தது.

இந்த பஞ்சாங்கத்தில் கருப்பு பண நடவடிக்கை குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. அது தற்போது உண்மையாகி விட்டது. கருப்பு பண நடவடிக்கை குறித்து ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

‘‘வங்கிகளில் புதிய மாற்றம் ஏற்படும். கணக்கில் இல்லாத கருப்பு பணத்தை கண்டுபிடிக்க நேரும். தணிக்கை துறையின் மூலம் அரசாங்கத்திற்கு பல கோடிக்கணக்கில் பணம் சேரும்படியான யோகம் உண்டு” இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

தற்போது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் கோடிக்கணக்கில் இந்த பழைய ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்தவர்கள் கணக்கு காட்டி அரசாங்கத்தில் வரி கட்டுவதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது. கருப்பு பணம் கணக்கில் வரக்கூடிய நிலையும் உருவாகி உள்ளது.

மேலும் பாகிஸ்தான் இந்திய எல்லை பகுதியில் அடிக்கடி தாக்குதல் நடத்துவதையும் இந்த பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணித்து வெளியிடப்பட்டு உள்ளது.

அதாவது எல்லையில் அந்நியநாடு அடிக்கடி தாக்குதல் நடத்தும் என்று ஆற்காடு கா.வெ.சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அது தற்போது உண்மையாகி உள்ளது.

சைனஸிலிருந்து விடுபட….

பொன்னாங்கண்ணீக் கீரை , கொத்தமல்லிக் கீரை இரண்டையும் சம அளவு எடுத்து , அத்துடன் சுக்கு , திப்பிலி. பூண்டு சேர்த்து கஷாயம் வைத்து தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டால் சைனஸ் தீரும்

கருஞ்சீரகம் ,.சுக்கு , தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து இரண்டு கிராம் அளவுக்குத் தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் சைனஸ் தொல்லை தீரும்.

ஒமத்தை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் சைனஸ் எனப்படும் பீனிச நோய் குணமாகும்.

மத்திய வங்கியை தனியார்மயப்படுத்தினால் மக்கள் பாதிக்கப்படுவர்!- மஹிந்த ராஜபக்ச

மத்திய வங்கியை தனியார் மயப்படுத்தினால் நிதி முறைமையே வீழச்சியடைந்து விடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்காலை கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

மத்திய வங்கியினால் ஆற்றப்படும் பணிகள் வெளித் தரப்புக்களுக்கு வழங்கப்படுது தேசிய குற்றமாகும்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து மத்திய வங்கியை தனியார் மயப்படுத்த எடுத்துள்ள தீர்மானம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

மத்திய வங்கி தனியார் மயப்படுத்துவது நிறுத்தப்படுவதன் மூலம் நாட்டு மக்களுக்கு நன்மைகள் ஏற்படும்.

இவ்வாறு தனியார் மயப்படுத்தப்படுவதனால் பாரியளவு கொள்ளைகள் இடம்பெறக்கூடும்.

நாட்டின் முழு நிதி முறைமையும் வீழ்ச்சியடைவதுடன் நிதி முறைமை குறித்த நம்பிக்கையும் வீழ்ச்சியடையும்.

மத்திய வங்கியின் மீதான நம்பிக்கை காரணமாகவே நாம் மத்திய வங்கியுடன் கொடுக்கல் வாங்கல் செய்கின்றோம்.

எமது ஆட்சிக் காலத்தில் மத்திய வங்கிக்கு ஸ்திரமான ஓர் நிலையை ஏற்படுத்திக் கொடுத்தோம்.

மத்திய வங்கியின் நிதிச் சபை விவகாரத்தில் தலையீடு செய்ததில்லை.எனினும் இன்று நிலைமை தலைகீழாக மாற்றமடைந்துள்ளது.

மத்திய வங்கி தனியார் மயப்படுத்தப்பட்டால் ஒட்டுமொத்த மக்களின் நிதிக் கொடுக்கல் வாங்கல்களும் பாதிப்புக்கு உள்ளாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மின்னல் தாக்கி விவசாயி பலி : மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு மல்லாவிப்பகுதியில் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான விவசாயி ஒருவர் நேற்று மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி பலியானதுடன் மற்றுமொரு விவசாயி காயமடைந்துள்ள நிலையில் மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள மல்லாவிப்பகுதியில் தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த  திருநகர் மல்லாவியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து ஞானேஸ்வரன் (வயது- 62) என்ற விவசாயியே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இவரது சடலம் மல்லாவி வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மல்லாவிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் அவருடன் வயலில் வேலை செய்து கொண்டிருந்த மற்றுமொரு விவசாயியான வளநகர் மல்லாவியைச் சேர்ந்த செல்லையா வசந்தகுமார் (வயது 55) என்பவர் காயமடைந்த நிலையில் மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சூப்பர்ஸ்டாரா பெண்ணிடம் இப்படி நடந்து கொண்டார்?… வெட்டவெளிச்சமான ரகசியம்!..

அலட்டல் இல்லாத ஸ்டைல், அதிரடியான நடிப்பால் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்கவைத்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவரது நடிப்பினை பார்ப்பதற்கு ஒரு கூட்டம் என்றால், இவரது ஸ்டைலை ரசிப்பதற்காகவே பல கோடி கூட்டம் இருக்கும். ரீல் வாழ்க்கையில் வெற்றிகரமான நட்சத்திரமாய் ஜொலிக்கும் ரஜினிகாந்த், தனது ரியல் வாழ்க்கையிலும் வெற்றிகரமான மனிதர்தான்.

1978 ஆம் ஆண்டுகளில் முன்னிலை நடிகராய் இருந்த ரஜினிகாந்த், தன்னை பேட்டி எடுக்க வந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டது ஒரு சுவாரசிய காதல் கதைதான்.

எத்திரராஜ் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து வந்த லதாவிற்கு தனது கல்லூரியின் சார்பில் ஒரு வேலை கொடுக்கப்பட்டது. அது, முன்னணி நடிகரான ரஜினிகாந்தை பேட்டி எடுக்க வேண்டும் என்பதுதான்.

தில்லு முல்லு படப்பிடிப்பில் ரஜினிகாந்த் இருந்தபோதுதான், லதா அவரை முதல் முறையாக நேரில் சந்தித்துள்ளார்.

பேட்டியின் போது பல்வேறு கேள்விகளை லதா கேட்டுள்ளார். இது ரஜினிகாந்திற்கு பிடித்துள்ளது. பேட்டியின் போதே தனது காதலை சொல்லாத ரஜினி, நேரடியாக என்னை திருமணம் செய்துகொள்கிறாயா? என கேட்டுள்ளார்.

இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத லதா, நான் எனது வீட்டில் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு ரஜினியின் சொந்த வாழ்க்கை பற்றி அறிய ஆரம்பித்துள்ளார் லதா. சிறு வயதில் அம்மாவை இழந்த ரஜினி, பல தடைகளை தாண்டிதான் சினிமாவில் வெற்றிபெற்றுள்ளார்.

மேலும், தொடர்ச்சியாக சூட்டிங் சென்றுவந்த காரணத்தால் ரஜினிகாந்த் நரம்பியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். ரஜினிகாந்த் நரம்பியல் பிரச்சனையில் இருந்து விடுபட்டால், தான் மொட்டை அடித்துக்கொள்கிறேன் என நேர்த்திவைத்துக்கொண்டார் லதா.

அதன்படியே மீண்டு வந்த ரஜினிக்காக, லதா மொட்டை அடித்துக்கொண்டார். இதற்கிடையில் தான் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணன், லதாவின் பெற்றோரை சந்தித்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார்.

என்னை கல்யாணம் செய்துகொள்கிறாயா? என்ற ஒரே கேள்வியால் லதாவை திணறடித்த ரஜினி, 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் திகதி இருவரும் திருப்பதி கோவிலில் வைத்து லதாவை திருமணம் செய்துக் கொண்டார்.