இலங்கை வந்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் !

இந்தியாவின் பிரபல நடிகை யான வரலக்ஷ்மி சரத்குமார் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் சென்னையில் இருந்து இன்று (17) காலை 11.04 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

வரலக்ஷ்மி சரத்குமார் கதாநாயகியாக நடிக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சர்வதேச திரைப்படத்தை இலங்கை சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் சதுன் ரத்னம் தயாரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் O/L பரீட்சை!

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பான ஆசிரியர் பயிற்சி குறித்த கலந்துரையாடல் நேற்று (16) மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தில் பிரதமரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இதன்போது, 2026 முதல் தரம் 1 மற்றும் 6-க்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும், 2028-ல் தரம் 10-க்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் 2029-ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படும் எனவும் மற்றும் தரம் 9 முதல் தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் கூறினார்.

கல்வி சீர்திருத்தங்கள் பாடத்திட்டத் திருத்தம், ஆசிரியர் பயிற்சி, நிர்வாக மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு, பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் தொடர்பு செயல்முறை, முறையான மதிப்பீடு ஆகிய ஐந்து தூண்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எனவும், மனப்பான்மை நிறைந்த ஆசிரியர்களை உருவாக்குவது தேசிய கல்வி நிறுவனங்களின் பொறுப்பு எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்த சீர்திருத்தங்களின் செயல்பாட்டை ஆராய்ந்து, முறையான மதிப்பீட்டு செயல்முறையை உருவாக்க அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தின் ஒவ்வொரு துறைத் தலைவர்களும் தங்கள் துறைகளின் மூலம் சீர்திருத்தங்களை செயல்படுத்துவது குறித்து விளக்கமளித்தனர்.

MFஇன் நான்காவது மதிப்பாய்வு தொடர்பில் வெளியாகிய செய்தி!

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு ஜூலை 01 ஆம் திகதி மதிப்பீடு செய்ய உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் அத தெரணவுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலின் போது இதனை தெரிவித்தார்.

கனடாவில் மாயமான இந்திய மாணவர் தொடர்பில் வெளியாகிய செய்தி!

கனடாவுக்கு கல்வி கற்பதற்காகச் சென்ற இந்திய மாணவர் ஒருவர் மாயமாகியுள்ள விடயத்தால் அவரது குடும்ப உறுப்பினர்கள் கலக்கமடைந்திருந்த நிலையில், தற்போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

ஏப்ரல் மாதம், இந்தியாவின் ஹரியானாவிலிருந்து கனடாவுக்குக் கல்வி கற்பதற்காக சென்றார் சாஹில் குமார் (22).

மே மாதம் 16ஆம் திகதி, ஹாமில்ட்டனில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து, ரொரன்றோவில் தான் கல்வி கற்கும் Humber கல்லூரிக்குப் புறப்பட்டுள்ளார் குமார்.

1.00 மணியளவில், தனது கல்லுரி இருக்கும் இடத்துக்கு அருகே குமார் நடமாடும் காட்சிகள் CCTV கமெராவில் பதிவாகியுள்ளன. அதற்குப் பிறகு குமாரைக் காணவில்லை.

இந்நிலையில், ரொரன்றோவில் குமாருடைய உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

அவரது மரணத்தின் பின்னணியில் குற்றச்செயல் எதுவும் இல்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

மகன் கனடாவுக்குச் சென்றதையடுத்து அளவற்ற மகிழ்ச்சியடைந்திருந்த குமாரின் குடும்பத்தினர், மகனுக்கு என்ன ஆயிற்று என்று தெரியாமல் கவலையில் ஆழ்ந்திருந்தார்கள்.

மே மாதம் 27ஆம் திகதி, நீர் நிலை ஒன்றில் குமார் உயிரிழந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் கூற, குமார் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தார்கள்.

வீடியோ அழைப்பு மூலம் அவரது உடல் அடையாளம் காணப்பட்டது.

அதற்குப்பின், கனேடிய பொலிசார் தங்களை அதிகம் தொடர்பு கொள்வதில்லை என்கிறார்கள் குமார் குடும்பத்தினர்.

பிள்ளைக்கு என்ன ஆனது என புரியாமல், சமீபத்தில் கனடாவில் காணாமல்போன இந்திய மாணவர்களின் குடும்பங்களை தொடர்புகொண்டு விசாரித்து வருகிறார்கள் அவர்கள்.

இதற்கிடையில், குமாருடைய உடல் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது என்பது போன்ற எந்த விவரங்களையும் வெளியிடாமல் வைத்துள்ளார்கள் கனேடிய பொலிசார்.

விஜய் சேதுபதியுடன் இணையும் தனுஷ் பட நடிகை!

கடந்த ஆண்டு மகாராஜா மற்றும் விடுதலை 2 ஆகிய இரண்டு ஹிட் படங்களை கொடுத்த விஜய் சேதுபதி, அடுத்ததாக தலைவன் தலைவி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் பாடல் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தலைவன் தலைவி படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய திரைப்படத்தை இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கி வருகிறார்.

நடிகை சார்மி கவுர், பூரி ஜெகநாத் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், படத்தின் கதாநாயகி குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.

சம்யுக்தா மேனன்

இந்த நிலையில், பிரபல நடிகை சம்யுக்தா மேனன் இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதாக அறிவித்துள்ளனர்.

மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ள சம்யுக்தா, தமிழில் தனுஷின் வாத்தி படத்தின் மூலம் அறிமுகமானார். பின் தற்போது பென்ஸ் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்த்தியின் எமோஷ்னல் பதிவு!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். இவர் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் கூறியிருந்தார்.

நடந்த ஒரு தயாரிப்பாளரின் மகள் திருமணத்தில் மேட்சிங் உடையில் கிசுகிசுக்கப்பட்ட கெனிஷாவுடன் கலந்துகொண்டார் ரவி. இதனால் கடுப்பான ஆர்த்தி அவருக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதன் பின், ஒருவறை ஒருவர் குறை கூறிக்கொண்டு அறிக்கை வெளியிட்ட வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில், தந்தையர் தினத்தை முன்னிட்டு ஆர்த்தி இணையத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். தற்போது, இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” என்னை முதலில் நேசித்த, நேசித்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதர். என்னை சுற்றி பல விஷயங்கள் நிச்சயமற்றது என்பதை நான் உணர்ந்தபோது நீங்கள் மட்டும் என்னுடன் உறுதுணையாக இருந்தீர்கள்.

நான் எப்படி கடந்து செல்வது என்று எனக்கு தெரியாத நாட்கள் இருந்தன, அப்போது என் பக்கத்தில் அமைதியாகவும், உறுதியாகவும், பலமாகவும் நின்றீர்கள்.

நீங்கள் என்னை மட்டும் வளர்க்கவில்லை எல்லா வழிகளிலும் என் மகன்களையும் சேர்த்து வளர்த்துக்கொண்டிருக்கிறீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஒற்றைத் தலைவலிக்கு தீர்வு தரும் எலுமிச்சை சாறு

தற்போது பலரும் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்றாக ஒற்றை தலைவலி பார்க்கப்படுகிறது.

வெயிலின் தாக்கம், சத்தம், பசி உள்ளிட்ட காரணங்களால் ஒற்றை தலைவலி வருகிறது.

மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் ஒற்றை தலைவலி குறையாத போது சிலர் வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கிறார்கள்.

அப்படியாயின், அடிக்கடி ஒற்றை தலைவலியால் அவஸ்தைப்படுபவர்கள் எலுமிச்சை சாறு குடித்தால் குணமாகும் என்ற கருத்து பரவலாக உள்ளது. இது உண்மையா? என்பதனையும் இதற்கான அறிவியல் காரணங்களையும் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

மருத்துவர் விளக்கம்

ஒற்றைத் தலைவலி அதிகமாக வருபவர்களுக்கு வலி குறைய வேண்டும் என்றால் எலுமிச்சை சாறு குடிக்க வேண்டும். அப்படி குடித்தால் தலைவலி கணிசமாக குறையும் என்கிறார்கள். இதற்கான நவீன மருத்துவ ஆதாரங்கள் எதுவும் இல்லை.

தலைவலி உள்ளவர்கள் அந்த இடத்தில் ஐஸ் கட்டி வைத்துக் கொள்வது நல்லது. அத்துடன் வெந்நீரில் கால்களை சிறிது நேரம் வைத்தால் வலி குறையும்.

தீர்வு
ஒற்றை தலைவலி வருவதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள உரிய மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும் பொழுது வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

அப்படி செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தால் சன் கிளாஸ், குடை, தொப்பி போன்றவை பயன்படுத்தலாம். அதே போன்று செல்போன், லேப்டாப் அதிக நேரம் பார்த்தாலும் ஒற்றைத் தலைவலி வர வாய்ப்பு உள்ளது. பார்க்கும் நேரத்தை குறைத்து கொள்வது சிறந்த தீர்வாக இருக்கும்.

சிலர் இரவு தூங்க செல்வதற்கு முன்னர் ஹெட் போனில் அதிக நேரம் பாட்டு கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதனை குறைத்துக் கொள்ளும் பொழுது ஒற்றை தலைவலி வராது.

பார்த்தாலே பசி எடுக்கும் இஞ்சி பூண்டு சட்னி

தென்னிந்திய உணவுகளில் சட்னிக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. குறிப்பாக உணவுகளில் சுவையை அதிகரிப்பதில் சட்னி வகைகள் இன்றியடையாதது.

இட்லி, சோசைக்கு சட்னி சாப்பிடுபவர்களை விட சட்னிக்காகவே இட்லி, தோசை சாப்பிடுபவர்கள் தான் அதிகம்.

அப்படி சட்னி பிரியர்களை திருப்திபடுத்தும் வகையில் அசத்தல் சுவையில் இஞ்சி பூண்டு சட்னி எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பூண்டு – 15

இஞ்சி – சிறிதளவு

தேங்காய் – ½ மூடி

கருவேப்பிலை – 1 கொத்து

வரமிளகாய் – 2

புளி – சிறிதளவு (ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு)

சீரகம் – 1 தே.கரண்டி

வெந்தயம் – ¼ தே.கரண்டி

கொத்தமல்லி விதை – 1 மேசைக்கரண்டி

உளுத்தம்பருப்பு – 1 மேசைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையானவை

நல்லெண்ணெய் – தாளிக்க

கடுகு – ¼ தே.கரண்டி

கடலைப் பருப்பு – ½ தே.கரண்டி

உளுந்தம் பருப்பு – ½ தே.கரண்டி

பெருங்காயம் – ¼ தே.கரண்டி

கருவேப்பிலை – 1 கொத்து

செய்முறை

முதலில் பூண்டு மற்றும் இஞ்சியை தோல் உரித்து நன்றாக கழுவி சுத்தம் செய்து தனியாக நறுக்கி தனியாக ஒரு தட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து தேங்காயை உங்கள் விருப்பப்படி துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காயவிட்டு, சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து பொரிய விடவேண்டும்.

பின்பு அதில் கருவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, அதனுடன் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் கொத்தமல்லி விதைகளையும் சேர்த்து நன்றாக வதக்கி, அதனுடன் நறுக்கிய இஞ்சி மற்றும் தோல் உரித்த பூண்டு சேர்த்து நன்றாக கிளறிவிட்டுக்கொள்ள வேண்டும்.

இறுதியில் துருவிய தேங்காய் மற்றும் கழுவி வைத்த புளியை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து ஆறவிட வேண்டும்.

நன்றாக ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் கடுகு மற்றும் கருவேப்பில்லை சேர்த்து பொரிய விட்டு, பின்னர் கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதனுடன் பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைத்து சட்னி உடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் இஞ்சி பூண்டு சட்னி தயார்.

விஜயகாந் மகனுக்கு விரைவில் டும் டும்!

கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன், விஜய பிரபாகரனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக அவரது தம்பி சண்முக பாண்டியன் உறுதிச் செய்துள்ளார்.

நடிகர் விஜயகாந்த்
தமிழ் சினிமாவை தன்னுடைய அபார நடிப்பால் தன்வசப்படுத்தியவர் தான் நடிகர் விஜயகாந்த்.

இவர், கோலிவுட் திரையுலகம் கண்டெடுத்த கருப்பு எம்ஜிஆர் எனவும் அழைக்கப்பட்டார்.

சினிமாவில் எப்படி இருப்பாரோ அதே போன்று நிஜ வாழ்க்கையிலும் தன்னிடம் கஷ்டம் என வருபவர்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வந்தார்.

தன்னை தேடி வருபவர்கள் யாரும் பசியோடு அனுப்ப கூடாது என்பதை தன்னுடைய வாழ்நாள் கொள்கையாகவே விஜயகாந்த் வைத்திருந்தார்.

விஜயகாந்த் மறைவு

இதற்கிடையில், விஜயகாந்த் பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

விஜயகாந்த் மறைவுக்கு பின்னர், விஜய பிரபாகரன் தீவிரமாக தன்னுடைய அம்மாவுடன் இணைந்து அரசியல் பணிகளை செய்து வருகிறார். மற்றொருவர் சண்முக பாண்டியன் தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளார்.

“சகாப்தம்” என்ற திரைப்படத்தில், கதாநாயகராக அறிமுகமாகிய இவர், கடந்த வாரம் வெளியாகி, வெற்றிநடை போட்டு வரும் “படைத்தலைவன்” படத்தில் தன்னுடைய திறமையான நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகளை வெளிகாட்டியுள்ளார்.

இதுவரையில், படைத்தலைவன் திரைப்படம் சுமாராக 5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

திருமணம்
இந்த நிலையில், திரைப்படம் குறித்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது சண்முக பாண்டியன் அண்ணன் திருமணம் குறித்த செய்தியை பகிர்ந்துள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு விஜய பிரபாகரனுக்கு பிரபல தொழிலதிபர் மகள் கீர்த்தனா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

இதனை தொடர்ந்து விஜயகாந்த் மறைந்த பின்னர், ஒரு வருடம் ஆன பின்னரே விஜய பிரபாகரனுக்கு திருமணம் நடக்கும் என கூறப்பட்டது. படைத்தலைவன் செய்தியாளர் சந்திப்பின் போது “விரைவில் எங்கள் வீட்டிற்கு அண்ணி வரப்போகிறார்..” என கூறி திருமணத்தை உறுதிச் செய்துள்ளார்.

ஏற்கனவே விஜய பிரபாகரனுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட பெண்ணான கீர்த்தனா தான் மணமகளா? அல்லது வேறு யாரையாவது விஜய பிரபாகரன் திருமணம் செய்து கொள்ள உள்ளாரா? என பல கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகின்றது.

முளைவிட்ட -பின்னர் சாப்பிட கூடாத காய்கறிகள்!

முளைவிட்ட பின்பு சாப்பிடக் கூடாத மூன்று காய்கறிகள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

முளைகட்டிய காய்கறிகள்
முளைகட்டிய பயிர்வகைகள் ஆரோக்கியமானது. பச்சைப் பயிறு, கொண்டக் கடலை போன்றவை முளைகட்டிய பின் சாப்பிட்டால் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக கிடைக்கும்.

நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகமாக காணப்படுவதுடன், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்தையும் அதிகரிக்கின்றது.

மேலும் இவற்றில் குறைந்த கலோரிகளும், அதிக புரதச்சத்தும் காணப்படுவதால், எடையை குறைக்க நினைப்பவர்கள் முளைகட்டிய தானியங்களை தாராளமாக எடுத்துக் கொள்கின்றனர்.

ஆனால் சில முளைகட்டிய காய்கறிகள் நமக்கு மிகப்பெரிய தீங்கை ஏற்படுத்திவிடும். அது என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

உருளைக்கிழங்கு

மிகவும் சீக்கிரம் கெடாத காய்கறிகளில் ஒன்றாக இருக்கும் உருளைக்கிழங்கு, நாட்கள் செல்ல செல்ல முளைத்துவிடுமாம். முளைவிட்ட உருளையில் கிளைகோல்கலாய்டுகள் காணப்படும்.

இது ஸ்லோ பாய்சனைப் போன்தாகும். குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி போன்ற பிரச்சனைகள் மட்டுமின்றி சில தருணங்களில் நரம்பியல் பிரச்சினைகள் கூட ஏற்படலாம்.

வெங்காயம்

இதே போன்று வெங்காயமும் முளைவிட ஆரம்பித்துவிடும். இவ்வாறு முளைத்திருக்கும் வெங்காயத்தில் ஆல்கலாய்டுகள் அதிகமாக உற்பத்தியாகும்.

அதிலும் என் புரோபைல் டை சல்பைடை உற்பத்தி செய்வதால் ரத்த சிவப்பணுக்கள் சேதமாகிவிடும். ரத்த சோகை, வாந்தி, குமட்டல், வயிறு வலி, வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்படும்.

பூண்டு
மேலும் முளைக்கட்டிய பூண்டுகளை ஒருபோதும் உண்ணக் கூடாது. வெங்காயத்தில் இருப்பது போல பூண்டிலும் அதிகளவு சல்பர் இருக்கும்.

இவை ஆல்கலாய்டுகளை உற்பத்தி செய்வதால் இரைப்பை குடல் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், ரத்த சிவப்பணுக்களையும் பாதிக்குமாம்.

இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.

எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்” என அழைக்கப்படுகின்றது.

அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

எண்கணிதம்படி, குறிப்பிட்ட சில தேதியில் பிறந்தவர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படியானவர்க்ள எந்த எண்ணில் பிறந்திருப்பார்கள் என்பதனை பதிவில் காணலாம்.

லட்சுமி அருள் கொண்ட தேதிகளில் பிறந்தவர்கள்

1. எண் 2
எண் கணிதத்தின் படி, 2ஆம் எண்ணில் பிறந்தவர்கள் லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதையும் மூளையால் அல்ல மனதால் சிந்திக்கும் திறன் கொண்டவர்கள். மனம் ரீதியாக பதில் கொடுப்பார்கள். மற்றவர்களின் தேவைகள் மற்றும் உணர்வுகளை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு அதிகமாக உதவிச் செய்வார்கள். அதிலும் குறிப்பாக இவர்களுக்கு விபத்து ஏதாவது நடக்கப்போகிறது என்றால் முன்கூட்டியே தெரிந்துவிடும்.

2. எண் 9
எண் கணிதத்தின் படி, 9ஆம் எண்ணில் பிறந்தவர்கள் ரொம்பவே கருணையுடையவர்களாக இருப்பார்க்ள. ஆன்மீகம் மீது அதிக பற்றுக் கொண்டவர்களாக இருப்பார்கள். மனிதாபிமானம் ரொம்பவே அதிகமாக இருக்கும். பிறருக்கு சேவை செய்வதிலும், வழிக்காட்டுவதிலும் தங்களது வாழ்க்கையை அர்ப்பணிப்பாரகள். இவர்களுக்கு நடக்கப்போகும் ஆபத்து முன்பே தெரியும்.
3. எண் 8
எண் கணிதத்தின் படி, 8 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் ஆன்மீக ரீதியில் ரொம்பவே வளர்ச்சி அடைந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களது வாழ்க்கையில் முக்கிய பாதை மாற்றங்களை காண்பார்கள். கனவுகள் மூலம் எதிர்காலத்தில் நடக்கும் விடயங்களை அறிந்து கொள்வார்கள்.

இன்றைய ராசிபலன்கள்17.06.2025

மேஷம்

சந்திராஷ்டமம் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லை என்று ஆதங்கப்படுவீர்கள். உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் போராட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னை வரக்கூடும். பொறுமை தேவைப்படும் நாள்.

ரிஷபம்

உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றி யடையும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் அதிகாரி உங்கள் புதிய முயற்சியை பாராட்டுவார். நன்மை நடக்கும் நாள்.

மிதுனம்

எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

கடகம்

குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

கன்னி

சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.

துலாம்

குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்தப் பொருட்களை வாங்குவீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடியான மாற்றம் உண்டாகும் நாள்.

விருச்சிகம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். முன்கோபத்தால் பகை உண்டாகும்.வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். நிதானம் தேவைப்படும் நாள்.

தனுசு

மறைமுக விமர்சனங்களும் எதிர்காலம் பற்றிய பயம் வந்து நீங்கும். உறவினர் நண்பர்களால் சங்கடங்கள் வரும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். தன்னம்பிக்கை தேவைப்படும் நாள்.

மகரம்

குடும்பத்தில் சுப நிகழ்ச்சி களில் கலந்து கொள்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் கடமை உணர்வுடன் செயல்பட தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.

கும்பம்

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர் நண்பர்கள் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மீனம்

புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். மனசாட்சிபடி செயல்பட வேண்டிய நாள்.

காதலனால் தாக்கப்பட்ட பெண்!

கனடாவில் தனது காதலனால் கத்தியால் தாக்கப்பட்டு ஒரு பெண் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒக்ஸ்போர்ட் Oxford Street மற்றும் வென்வொர்த் Wentworth Street அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்தியால் காயப்படுத்தும் சம்பவம் குறித்து காலை 11:40 மணியளவில் அவசர அழைப்பு பெறப்பட்டது.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, பல கத்திக் குத்து காயங்களுடன் இருந்த பெண்மணியை மீட்டுள்ளனர்.

குறித்த பெண் டொரொண்டோவிலுள்ள ஒரு அவசர சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், விசாரணையின் மூலம் அவர் 38 வயதான அந்தப் பெண்மணியின் காதலன் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

பின்னர் பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகரிடம் ரஜினிகாந்த் கூறிய விஷயம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைவசம் தற்போது கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்கள் உள்ளனர். இதில் வருகிற ஆகஸ்ட் மாதம் கூலி திரைப்படம் பிரம்மாண்டமாக வெளிவரவுள்ளது. அடுத்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜெயிலர் 2 வெளிவரும் என கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் குறித்து பல நடிகர்கள், நடிகைகள் பேட்டிகளில் பேசியுள்ளார். அவருடன் பணிபுரிந்த அனுபவம், அவருடைய எளிமை, அவருடைய குணம் குறித்து பகிர்ந்துள்ளார். இந்த நிலையில், தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் ராதாரவி ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது: “எஜமான் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்றது. அப்போது நான் அங்கு சென்றிருந்தேன். படப்பிடிப்பு நடந்த இடத்தில்தான் அவர் தங்கியிருந்தார். அவரிடம் எனது படத்துக்கு கால்ஷீட் கொடுங்கள் என கேட்டேன். அவரும் தருவதாக ஒத்துக்கொண்டார். சில நாட்களுக்கு பின் ரஜினியிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் இப்போதைக்கு கால்ஷீட் தர முடியாது. நீங்கள் சொன்ன சின்ன படத்தை குடித்துவிடுங்கள். அதனையடுத்து கால்ஷீட் தருகிறேன் என கூறியிருந்தார். நானும் அவரை தொந்தரவு செய்யவில்லை.

பிறகு ஒருநாள் அவரை மீண்டும் சந்தித்தேன். ஒரு படத்துக்காக என்னை நடிக்க அழைத்தார். நான் அப்போது அவரிடம் ‘என்னை நீங்கள் வில்லனாகவே நடிக்க அழைக்கிறீர்கள். நான் நன்றாக நடிப்பேன், நகைச்சுவை செய்வேன். ஏன் என்னை வயதான கெட்டப்புக்கே அழைக்கிறீர்கள். தொடர்ந்து உங்களுக்கு எதிரானவன் போலவே இருக்கிறேனே என கூறினேன். அதற்கு அவரோ, ராதாரவி ஒன்று புரிந்துகொள்ளுங்கள். மற்றவர்கள் என்ன அடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், நீங்கள் என்னை அடிக்கலாம், அப்படி அடித்தால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். அதனால்தான் உங்களை அழைக்கிறேன்’ என்றார்” என ராதாரவி பேசியுள்ளார்.

இதே போல் நடிகர் ஆனந்த் ராஜிடமும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். பாட்ஷா பட சமயத்தில் இப்படி நடந்ததாக நடிகர் ஆனந்த் ராஜ் பேட்டியில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

பார்த்திபன், தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என தன்னை நிரூபித்து வருபவர்.

இயக்குனர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் பின் இயக்குனர் அவதாரம் எடுத்து 16 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.

14 படங்களை தயாரித்தும், 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார். பாரதி கண்ணம்மா, நீ வருவாய் என, வெற்றிக் கொடி கட்டு, அழகி, ஆயிரத்தில் ஒருவன், ஒத்த செருப்பு போன்ற படங்கள் இவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன.

பிரபலங்களின் வாரிசுகள் தொடர்ந்து சினிமாவில் களமிறங்கி வருகிறார்கள். அப்படி நடிகரும், இயக்குனருமான பார்த்திபனின் மகன் ராக்கி விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறாராம்.

தனது மகன் சினிமாவில் இயக்குனராக களமிறங்குகிறார் என்பதை எவ்வளவு அழகாக பார்த்திபன் அறிவித்துள்ளார் என்பதை நீங்களே காணுங்கள்,

உயர்தர மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தால் விசேட நிகழ்ச்சி திட்டம்!

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது.

அங்கு, 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 60 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு நிதி புலமைப்பரிசில் மற்றும் சான்றிதழ்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

2023/2024 பரீட்சைகள் தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட பெறுபேறுகளை கருத்தில் கொண்டு இந்த மாணவர்கள் தெரிவு, மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாகாண மட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் முதல் நிகழ்ச்சித்திட்டமாக, 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, வட மாகாண மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு 2025 ஜூன் 22 ஆம் திகதி கிளிநொச்சியில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி, 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு பாராட்டப்படவுள்ளனர்.

இதேவேளை, ஏனைய மாகாணங்களிலும் விரைவில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை!

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்படும் என , வெளியான செய்தி தொடர்பாக இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்படும் என 2025 ஜூன் மாதம் 12 ஆம் திகதி பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்களில் இந்த தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பான இறுதித் தீர்மானம் ஒன்றை மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் இதுவரையிலும் எடுக்கவில்லை என்றும், அது குறித்து எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களுக்குப் பதிலாக புதிய சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஊடகங்களினூடாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் கொழும்பு விமான சேவைகள் விரைவில்

கொழும்பு, இரத்மலானை விமான நிலையம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடையே நேரடி உள்நாட்டு விமான சேவையை இயக்குவதற்கான, விமானக் செயல்பாட்டுச் சான்றிதழை இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் , டேவிட் பீரிஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு இன்று (16) வழங்கியுள்ளது.

இந்த விமானப் பயணம் 01 மணி நேரம் 20 நிமிடங்கள் எடுக்கும், மேலும் இதற்காக செஸ்னா-280 விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கான முனையம் கட்டப்பட்டு வருகிறதுடன், அதன் பணிகள் முடிந்ததும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

ஹோட்டல் ஒன்றில் பெண்களுடன் கைதான நபர்!

கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென்னகும்புர பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கண்டி பலகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஆணொருவரும் குருணாகல் கெட்டுவான பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவரும் ஆவர். சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றினால் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சிதைக்கப்பட்டது ஈரானின் அணுசக்தி மையம்!

இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களால் ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி மையம் சேதமடைந்துள்ளதை சர்வதேச அணுசக்தி முகமை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி மையம் சேதமடைந்துள்ளதை சர்வதேச அணுசக்தி முகமை உறுதி செய்துள்ளது.

தெற்கு தெஹ்ரானில் இருந்து 400 கி.மீ., தொலைவில் உள்ள இஸ்பஹான் யுரேனியம் மாற்று ஆலை பயங்கர சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டம் பல மாதங்கள் தாமதப்படுத்தப்படலாம் என்று எச்சரித்துள்ளது. அதேவேளையில், 1,640 அடி ஆழத்தில் மலைக்குள் அமைந்துள்ள போர்டோ அணுசக்தி மையம் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளது.

இந்த சூழலில், வியன்னாவில் சர்வதேச அணுசக்தி முகமை அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று கூடுகிறது.

இந்தக் கூட்டத்தில் ஈரான் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மற்றும் யுரேனியத்தின் இருப்பு குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட இருக்கிறது.