பிரபல நடிகரிடம் ரஜினிகாந்த் கூறிய விஷயம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைவசம் தற்போது கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்கள் உள்ளனர். இதில் வருகிற ஆகஸ்ட் மாதம் கூலி திரைப்படம் பிரம்மாண்டமாக வெளிவரவுள்ளது. அடுத்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜெயிலர் 2 வெளிவரும் என கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் குறித்து பல நடிகர்கள், நடிகைகள் பேட்டிகளில் பேசியுள்ளார். அவருடன் பணிபுரிந்த அனுபவம், அவருடைய எளிமை, அவருடைய குணம் குறித்து பகிர்ந்துள்ளார். இந்த நிலையில், தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் ராதாரவி ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது: “எஜமான் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்றது. அப்போது நான் அங்கு சென்றிருந்தேன். படப்பிடிப்பு நடந்த இடத்தில்தான் அவர் தங்கியிருந்தார். அவரிடம் எனது படத்துக்கு கால்ஷீட் கொடுங்கள் என கேட்டேன். அவரும் தருவதாக ஒத்துக்கொண்டார். சில நாட்களுக்கு பின் ரஜினியிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் இப்போதைக்கு கால்ஷீட் தர முடியாது. நீங்கள் சொன்ன சின்ன படத்தை குடித்துவிடுங்கள். அதனையடுத்து கால்ஷீட் தருகிறேன் என கூறியிருந்தார். நானும் அவரை தொந்தரவு செய்யவில்லை.

பிறகு ஒருநாள் அவரை மீண்டும் சந்தித்தேன். ஒரு படத்துக்காக என்னை நடிக்க அழைத்தார். நான் அப்போது அவரிடம் ‘என்னை நீங்கள் வில்லனாகவே நடிக்க அழைக்கிறீர்கள். நான் நன்றாக நடிப்பேன், நகைச்சுவை செய்வேன். ஏன் என்னை வயதான கெட்டப்புக்கே அழைக்கிறீர்கள். தொடர்ந்து உங்களுக்கு எதிரானவன் போலவே இருக்கிறேனே என கூறினேன். அதற்கு அவரோ, ராதாரவி ஒன்று புரிந்துகொள்ளுங்கள். மற்றவர்கள் என்ன அடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், நீங்கள் என்னை அடிக்கலாம், அப்படி அடித்தால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். அதனால்தான் உங்களை அழைக்கிறேன்’ என்றார்” என ராதாரவி பேசியுள்ளார்.

இதே போல் நடிகர் ஆனந்த் ராஜிடமும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். பாட்ஷா பட சமயத்தில் இப்படி நடந்ததாக நடிகர் ஆனந்த் ராஜ் பேட்டியில் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.