ஆந்திரா பாணியில் தக்காளி பருப்பு குழம்பு.

மதியம் சாதத்துடன் சாப்பிடுவதற்கு வழக்கமான பருப்பு குழம்பு போல் இல்லாமல், மிகவும் எளிமையாக முறையில் ஆந்திரா பாணியில் தக்காளி பருப்பு குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

பருப்பில் அதிகளலு புரதமும் தக்காளியில் வைட்டமின் சி அதிகளவில் இருப்பதால் வாரம் ஒரு முறையாவது இந்த குழம்பை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு – 100 கிராம்

தக்காளி – 4

மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

மிளகாய் தூள் – 1 தே.கரண்டி

தண்ணீர் – 1/2 லிட்டர்

எண்ணெய் – சிறிது

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

எண்ணெய் – 2 தே.கரண்டி

கடுகு – 1 தே.கரண்டி

கடலைப் பருப்பு – 1/4 தே.கரண்டி

சீரகம் – 1/2 தே.கரண்டி

வரமிளகாய் – 2

கறிவேப்பிலை – 1 கொத்து

வெங்காயம் – 1

பூண்டு – 10 பல்

பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை
முதலில் துவரம் பருப்பை நன்றாக கழுவி சுத்தம் செய்து குக்கரில் போட்டுக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் புளியை ஊறவைத்து கெட்டியாக சாறு எடுத்து ஒரு கிண்ணத்தில் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் துவரம் பருப்புடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிறிது எண்ணெய் மற்றும் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் வரும் வலையில் வேகவிட்டு இறக்கி குளிரவிட வேண்டும். ஆறியதன் பின்னர் குக்கரை திறந்து மத்து கொண்டு லேசாக மசித்துவிட வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து ஒரு நிமிடம் வரையில் வதக்கிவிட்டு, அடுதனுடன் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பை ஊற்றி, பெருங்காயத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் ஆந்திரா பாணியில் சுவையான தக்காளி பருப்பு குழம்பு தயார்.

ராயன் படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ராயன் படம்
இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷின் ராயன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

தனுஷே இயக்கி, நடித்த அவரது 50வது படமாக உருவாகியுள்ள ராயன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் எஸ்ஜே சூர்யா, செல்வ ராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா முரளி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அடங்காத அசுரன், வாட்டர் பாக்கெட மூஞ்சு, ராயன் ரம்பல் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகரின் சம்பளம்
நடிகர் தனுஷ் ராயன் படத்தை தானே இயக்கி, அதில் நடித்தும் உள்ளார். அவரது 50வது படம் என்பதால் ரசிகர்களால் ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் இரண்டு வேலைகளை செய்துள்ள நடிகர் தனுஷ் இப்படத்திற்காக ரூ. 45 முதல் ரூ. 50 கோடி வரை சம்பளமாக வாங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க மறுத்தது ஏன் மனம் திறந்த சுஜிதா

பாண்டியன் ஸ்டோர்ஸ்
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பல வருடங்களாக நடித்துவரும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள்.

அவர்களின் லிஸ்டில் பிரபல நடிகை சுஜிதாவும் இடம்பெறுவார். சீரியல், படங்கள் என மாறி மாறி நடித்துவரும் சுஜிதா இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார்.

தொடர்ச்சியாக 3 வாரங்களுக்கு இவர்தான் Chef Of The Week பட்டத்தை வென்றிருக்கிறார்.

காரணம் என்ன

சிறுவயதில் இருந்தே நடித்து வந்தாலும் சுஜிதா பெரிய அளவில் ரீச் ஆன விஜய் தொலைக்காட்சியில் 5 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் தான்.

தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய இவர் ஏன் 2ம் பாகத்தில் நடிக்கவில்லை என்பது குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், 2ம் பாகத்தில் நான் அம்மாவாக நடிக்க வேண்டிய நிலை இருந்தது, அதிலும் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து குழந்தை இருக்கிறது என்று கதை.
இதில் நான் நடித்தால் நன்றாக இருக்காது என நினைத்தேன், சேனல் தரப்பில் இருந்தும் என்னிடம் உங்களுக்காக கதையை வேண்டும் என்றால் மாற்றிக் கொள்கிறோம் என்று சொன்னார்கள்.

ஏற்கெனவே 5 வருடமாக ஒரே கதையில் நடித்துவிட்டோம், அதனால் இனி ஒரு மாற்றம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன். அதனால் தான் சேனல் தரப்பில் பல சலுகைகள் கொடுத்தும் நான் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இன்றைய நாணய மாற்று விகிதங்களில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 26) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 298.7131 ரூபாவாகவும், விற்பனை விலை 307.9537 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

ராயன் படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூல்..

ராயன்
முன்னணி நடிகரான தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராயன். இப்படம் இன்று உலகளவில் வெளியாகியுள்ளது. பா. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் தனுஷ்.

இதன்பின் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் இது தனுஷின் 50வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார். சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், காளிதாஸ், செல்வராகவன், சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முதல் நாள் ப்ரீ புக்கிங்
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள ராயன் படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராயன் படம் முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் ரூ. 6.7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தனுஷின் கெரியர் பெஸ்ட் என சொல்லப்படுகிறது. இதனால் முதல் நாளின் மொத்த வசூல் தனுஷின் கெரியரில் புதிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோவுக்கு நிகராக சம்பளம் வாங்கும் பாலிவுட் நடிகைகள்

பாலிவுட்:
ஹிந்தி திரைப்படத்துறை இந்தியாவில் மிக அதிக அளவில் படம் தயாரிக்கும் மையங்களில் ஒன்றாக விளங்குகிறது.அந்த வகையில் பாலிவுட் நடிக்கும் நடிகை, நடிகர்கள் அனைவருமே அதிக அளவில் சம்பளம் வாங்குகிறார்கள்.

கோலிவுட்டில் மட்டும் தான் நடிகர் நடிகைகளுக்கு வழங்கப்படும் சம்பளம் பெரிய அளவில் வேறுப்பட்டு இருக்கும் என்று நினைத்தால். பாலிவுட்டிலும் நடிகர் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம் பெரிதும் வேறுப்பட்டு இருக்கிறது.

இந்த ஏற்றத்தாழ்வு முன்பு ஒரு பேசுபெருளாகவே இருந்த நிலையில் தற்போது அது மாறுபட்டுள்ளது. அந்த வகையில் பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலை பற்றி காணலாம்.

சம்பளம்
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகை தீபிகா படுகோன். இவர் ஒரு படத்திற்கு மட்டும் சுமார் ரூ .15 முதல் ரூ .20 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

அந்த வரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் நடிகை ஆலியா பட் இவர் ஒரு படத்திற்கு மட்டுமே ரூ .15 கோடி வரை சம்பளம் பெறுகிறார். அடுத்து இருப்பவர் கரீனா கபூர் இவர் ஒரு படத்திற்கு ரூ.8 முதல் ரூ.11 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

நான்காவது இடத்தில் இருப்பவர் நடிகை கத்ரீனா கைப் மற்றும் ஐந்தாவது இடத்தில் ரூ .5 முதல் ரூ .8 வரை சம்பளம் வாங்குகின்றனர்.

நடிகை வனிதாவின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படம்.. First லுக் போஸ்டர் இதோ

விஜய் ஸ்ரீ ஹரி
திரையுலகில் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். இவருடைய மகள் வனிதா விஜயகுமாரின் மூத்த மகன் தான் விஜய் ஸ்ரீ ஹரி.

இவர் தனது தாத்தாவின் கண்காணிப்பில் வளர்ந்தார். வெளிநாட்டிற்கு சென்று அன்று சினிமா சம்மந்தமான படிப்பை முடித்துவிட்டு, குறும் படங்கள் எடுத்து வந்தார் விஜய் ஸ்ரீ ஹரி

ஹீரோவாக அறிமுகம்

இந்த நிலையில், தற்போது ஹீரோவாகவும் களமிறங்கியுள்ளார். ஆம், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் மாம்போ. இப்படத்தில் நிஜ சிங்கத்தை நடிக்க வைத்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள விஜய் ஸ்ரீ ஹரிக்கு திரையுலகினர் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மாம்போ படத்தின் First லுக் போஸ்டரை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த போஸ்டர்..

வீடே மணக்கும் கிராமத்து கருவாட்டு குழம்பு…

கிராமத்து ஸ்டைலில் கருவாட்டுக் குழம்பு எவ்வாறு செய்வது இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் முக்கியமாக இருக்கும் உணவு கருவாடு ஆகும். அதிலும் கிராம புறங்களில் வைக்கப்படும் கருவாடு குழம்பை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது.

நல்லெண்ணெய் ஊற்றி சமைக்கப்படும் கருவாடு குழம்பிற்கு ருசி தனி தான். தற்போது கிராமத்து ஸ்டைலில் கருவாட்டுக் குழம்பு எவ்வாறு வைப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.

சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் கிராமத்து ஸ்டைலில் கருவாட்டுக் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
கருவாடு – தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 25 (நறுக்கியது)
தங்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 15
புளி – சிறிதளவு (நெல்லிக்காய் அளவு)
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
வெந்தயம் – 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய், தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றவும்.

எண்ணெய் காய்ந்ததும், கடுகு, வெந்தயம், உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் இவற்றினை சேர்க்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு மிளகாய், மல்லி, மஞ்சள் தூள்களை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

பின்பு இதனுடன் புளிகரைசலை விட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும். மற்றொரு புறம் கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் கருவாடை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

குழம்பு நன்றாக கொதித்ததும், வறுத்து வைத்திருக்கும் கருவாட்டை எண்ணெய்யுடன் குழம்பில் சேர்க்கவும்.

தற்போது சுவையான கிராமத்து ஸ்டைலில் கருவாட்டு குழம்பு தயார்.

தமன்னாவை போல் இருக்கும் ஆண்

தமன்னா
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கிறார் தமன்னா. தற்போது தமிழில் சரியான பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் தமன்னா அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

வைரல் பதிவு
இந்நிலையில் ஒரு மீம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் ஆண் ஒருவர், ” விஜய் தேவரகொண்டா போல் உடையை அணிய நினைத்து Oosaravelli படத்தில் வரும் தமன்னா போல் மாறிவிட்டார்” என்று கலாய்த்தபடி மீம் பதிவிட்டு இருந்தனர்.

தற்போது தமன்னா இந்த மீம்மை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, “கிட்டத்தட்ட” என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த பதிவு..

திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்
மலையாள படஙக்ளில் நடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ், விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயன் என்ற படத்தின் மூலமா தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை அடுத்து ரஜினிமுருகன், ரெமோ, சீமராஜா, தொடரி, சண்டக்கோழி 2, சர்கார், பைரவா, சாணிக் காயிதம், மாமன்னன், சைரன் எனப் பல படங்களில் நடித்துள்ளர். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள ரகு தாத்தா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவுள்ளது.

பதிலடி

நடிகை கீர்த்தி சசுரேஷ் அவரது நண்பரை திருமணம் செய்ய போகிறார் போன்ற வதந்திகள் வந்துகொண்டு இருந்தது.

இந்நிலையில் இவர் தன் மீது வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர், பாராட்டுக்களை எப்படி சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறோமோ அதே போல விமர்சனங்களையும் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.

என்னுடைய தனிப்பட்ட விஷயங்களை தலையிட்டு, என் குடும்பத்தார் குறித்து நடக்காத விஷயங்களை நடந்தது போல கதை கட்டி பேசுவதை நான் இரண்டு காதுக்குள் போட்டுக் கொள்ளவே மாட்டேன். நடிகர் விஜய் சொன்னது போல, உண்மைக்கு விளக்கம் கொடுக்கலாம், ஆனால், வதந்திக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகிவிடும் என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

விஜய் இடத்தை பிரஷாந்த் நிரப்புவார்.

வனிதா விஜயகுமார்
நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், ”இன்றைய நாள் எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான நாள்.‌ என்னுடைய திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படம் இது. இந்தத் திரைப்படத்தில் அற்புதமான ஒரு வேடம் கிடைத்திருக்கிறது அதில் திறமையாக நடித்திருக்கிறேன். இதனால் எனக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் இதனை குறிப்பிடவில்லை. இது என் குடும்பம். என்னுடைய வாழ்க்கையில் மிகச்சிறந்த வழிகாட்டி தியாகராஜன் சார். இன்றும் அவரை நான் நேசிக்கிறேன்.

பிரசாந்த் எனக்கு புதியவரல்ல.‌ நான் 90களில் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கும் போதே அவர் மீது எனக்கு கிரஷ் இருந்தது. என்னுடைய முதல் டீன் ஏஜ் கிரஷ் பிரசாந்த் தான்.

அவருடன் கடந்த சில வருடங்களாக பழகும் போது அன்பான நட்பு கிடைத்தது.‌ அந்த நட்பு அழகானது. மதிப்பு வாய்ந்தது. பிரசாந்த் சிறந்த மனிதர். அவரை நினைத்து நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன். அவருடைய நேர்மை , பெருந்தன்மை, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு என எல்லாமே அவருடைய தந்தையிடம் இருந்து அவர் கற்றுக் கொண்டிருக்கிறார். அவர் எப்போதும், ‘இவர் (தியாகராஜன்) போன்ற ஒரு அப்பா இருந்தால் அதுவே போதும் ‘ என்பார்.

இந்த திரைப்படம் தரமான படைப்பு. அருமையான நட்சத்திர கலைஞர்கள், திறமை வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் கூட்டணியில் உருவாகி இருக்கிறது. இந்தப் படைப்பை விளம்பரப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு இல்லை. ஏனென்றால் இந்த திரைப்படம் அதுவாகவே விளம்பரத்தை தேடிக் கொள்ளும். ரசிகர்களிடம் இந்தத் திரைப்படம் எளிதாக தானாகவே சென்றடையும்.‌ இந்தத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும்.‌

ஒரு ரசிகையாக இந்தியில் வெளியான அந்தாதுன் திரைப்படத்தையும் பார்த்திருக்கிறேன். அந்த படத்தின் வேற்று மொழி ரீமேக்கையும் பார்த்திருக்கிறேன். ஆனால் தியாகராஜன் சார் தமிழில் மிகப் பெரும் நட்சத்திர பலத்துடன் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.‌

இந்த திரைப்படத்தில் பணியாற்றும் போது படப்பிடிப்பு தளத்தில் பணிகளை நிறைவு செய்தவுடன் தியாகராஜன் சார் அன்றைய சம்பளத்தை அன்றே கொடுத்து விடுவார். படத்திற்கு பின்னணி பேசும் போது இரண்டு மடங்கு சம்பளத்தை கொடுத்தார். அவரிடம் பணம் இருக்கிறது என்பதற்காக கொடுக்கவில்லை. ஒரு நட்சத்திரத்தின் மதிப்பை அறிந்து அதனை கவுரவப்படுத்தும் விதமாக அது இருந்தது.

நான் ஒரு பயணத்தின் போது என்னுடைய செல்போனை தொலைத்து விட்டேன். அப்போது தியாகராஜன் சார் தொடர்பு கொண்டார். நான் பதட்டத்தில் இருப்பதை உணர்ந்து, உடனடியாக நீ எங்கு இருக்கிறாய் என கேட்டார். உடனடியாக எனக்கு ஒரு விலை உயர்ந்த செல்போனை பரிசாக அளித்தார், அதுதான் தியாகராஜன் சார்.

“நான் விஜய்யுடன் நடிக்கும்போது நீ தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என சொன்னேன். அவர் அப்போது நம்பவில்லை. அவர் இன்று இருக்கும் என அவருக்கு தெரியும். விஜய் தற்போது அரசியலுக்கு சென்றுவிட்டார். அந்த இடத்திற்கு பிரஷாந்த் வருவார். நீங்கள் தான் அடுத்த சூப்பர்ஸ்டார்” என பேசினார்.

 

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, விலைகள் குறைக்கப்பட்ட பொருட்களை நாளை முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச கிளைகளிலும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

விலைக்குறைப்பின்படி, சதொச பால் மா 400 கிராம் பொதியின் முந்தைய விலை 950 ரூபாவாகவும் புதிய விலை 910 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விலை குறைப்பு
ஒரு கிலோ பாசிப்பயரின் முந்தைய விலை 998 ரூபாய் – புதிய விலை 965 ரூபாய், ஒரு கிலோ வெண்டைக்காய் முந்தைய விலை 978 ரூபாய் – புதிய விலை 950 ரூபாய்.’

ஒரு கிலோ இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தின் முந்தைய விலை 305 ரூபாய் – புதிய விலை 285 ரூபாய்.

ஒரு கிலோ கொண்டைக்கடலையின் முந்தைய விலை 455 ரூபாய் – புதிய விலை 444 ரூபாய்.

ஒரு கிலோ கோதுமை மாவின் முந்தைய விலை 190 ரூபாய் – புதிய விலை 185 ரூபாய்.

ஒரு கிலோ வெள்ளை சீனியின் முந்தைய விலை 263 ரூபாய் – புதிய விலை 258 ரூபாய்.

ஒரு கிலோ வெள்ளை அரிசியின் முந்தைய விலை 204 ரூபாய் – புதிய விலை 199 ரூபாய்.

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம் முந்தைய விலை 190 ரூபாய் – புதிய விலை 185 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாளை தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது.

இதனிடையே ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வார இறுதிக்குள் வெளியாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் கடந்த 17ஆம் திகதியுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றது.

ஜனாதிபதி தேர்தல்
இந்த நிலையில், இந்த மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தொடர்பில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த வாரம் அறிவித்திருந்தது.

இதற்கமைய ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் இந்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாளைய தினம் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்படவுள்ளது.

எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் திகதி தொடர்பான வர்த்தமானி இந்த வார இறுதிக்குள் வெளியாகும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கமளித்துள்ளார்.

கனடாவில் களவாடப்பட்ட பெறுமதி வாய்ந்த சைக்கிள்

கனடாவில் புற்றுநோய் ஆய்வுகளுக்காக நிதி திரட்டும் நோக்கில் பயணங்களை மேற்கொண்ட சைக்கிள் ஒன்று களவாடப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் இந்த சைக்கிள் களவாடப்பட்டுள்ளது.

டொரன்டோவின் இட்டோபிகாக் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து இந்த சைக்கிள் களவாடப்பட்டுள்ளது.

வீட்டின் கதவு உடைக்கப்பட்டு சைக்கிள் மற்றும் சில பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் மொனிக்கா டியோடான்ஸ் தெரிவிக்கின்றார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த சைக்கிளை தான் கொள்வனவு செய்ததாக அவர் தெரிவிக்கின்றார்.

இந்த சைக்கிள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது எனவும் இதனை வடிவமைப்பதற்கு சுமார் 10,000 டாலர்கள் செலவிட்டதாகவும் மொனிக்கா தெரிவிக்கின்றார்.

வீட்டு காப்புறுதி ஊடாக இந்த சைக்கிளை மீள பெற்றுக்கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

1986 ஆம் ஆண்டு முதல் புற்றுநோய் ஆய்வாளராக கடமை ஆற்றி வருவதாக அவர் தெரிவிக்கின்றார்.

புற்றுநோயை ஆய்வு நடவடிக்கைகளுக்காக 90 ஆயிரம் டாலர்களை நன்கொடையாக தான் திரட்டியுள்ளதாக தெரிவிக்கின்றார்.

இதேவேளை, டொரன்டோவில் கடந்த ஆண்டு சுமார் 3000 சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வருடா வருடம் ரூ. 30 கோடி நன்கொடை கொடுக்கும் பிரபல நடிகர்.

பிரபல நடிகர்
முன்னணி பிரபலங்களை தங்களது வாழ்க்கையின் முன் உதாரணமாக வைத்து வாழும் ரசிகர்கள் பலர் உள்ளார்கள்.

அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களை பார்த்து ரசிகர்களும் வாழ்க்கையில் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். அப்படி பெரும்பாலான பிரபலங்கள் மற்றவர்களுக்கு உதவுவதை தங்களது ரசிகர்களுக்கு அதிகம் செய்து காட்டியுள்ளனர்.

அப்படி ஒரு பிரபலம் வருடா வருடம் நன்கொடை கொடுக்கும் தகவல் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

யார் அவர்
அமிதாப் பச்சன், சல்மான் கான், சோனு சூட் தொடங்கி தமிழ் விஜய், அஜித் உள்ளிட்ட பலர் சமூக நலன்கனுக்காக நன்கொடை கொடுத்து கூருகிறார்கள்.

அப்படி தெலுங்கு சினிமாவில் பிரின்ஸ் ஆஃப் டோலிவும் என அழைக்கப்படும் மகேஷ் பாபு பெரிய தொகை நன்கொடை கொடுத்து வருகிறார்

இந்திய திரையுலகில் பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் மகேஷ் பாபு 40க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார், தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.திரைப்படம்

படங்கள் நடிப்பது மூலம் அதிகம் சம்பாதிக்கும் மகேஷ் பாபு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 25 முதல் ரூ. 30 கோடி வரை ஏழைகளுக்காக செலவிடப்படுவதாக கூறப்படுகிறது

சிம்பு தேவன் இயக்கியுள்ள போட் படத்தின் முதல் விமர்சனம்!

சிம்பு தேவன்
நகைச்சுவை என்பது சாரதானமான விஷயம் இல்லை. அதை திரையில் சரியாக வழங்கவில்லை என்றால் அதுவே சீரியஸான படமாக மாறிவிடும். அப்படி நகைச்சுவையில் அசத்தும் இயக்குனர்களில் ஒருவர் சிம்பு தேவன்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற படங்கள் எப்போதும் பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது.

போட்
இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் தான் போட். யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், கௌரி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், போட் படத்தை பார்த்துவிட்டு பிரபல மூத்த முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பி.சி. ஸ்ரீராம் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

முதல் விமர்சனம்
இதில் “சிம்பு தேவனின் போட் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படம் இந்திய சினிமாவில் இது மற்றொரு மைல்கல்லாக இருக்கும். மிகவும் அழகாக அனுபவம்” என கூறியுள்ளார்.

இதன்மூலம் போட் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கண்டிப்பாக வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளிவரவிருக்கும் போட் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட வாய்ப்பு கேட்டு போன இடத்தில் நடந்த மோசமான அனுபவம்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் முக்கியமாக ஹீரோயின்களை மையப்படுத்திய கதையை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாள மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

ஓபன் டாக்

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.அதில் அவர், சினிமாவில் எனக்கு வேதனையான அனுபவங்கள் நிறைய உள்ளது. 10 வருடங்களுக்கு முன்பு ஒரு இயக்குனர் அழைத்து இருந்தார்.

நானும் சென்று இருந்தேன், என்னை பார்த்துவுடன், இந்தப் பெண் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகக்கூட இருக்க முடியாது திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று அந்த இயக்குனர் பேசினார். ஆனால் நான் அவர் சொன்னதை ஊக்கமாக எடுத்துக்கொண்டேன்.

அதே போல இயக்குனர் ஒருவரை பார்ட்டியில் சந்தித்தேன், அவரிடம் எதாவது ரோல் கேட்டேன் ஆனால் அவரோ எனக்கு ரொம்பவே மோசமான கதாபாத்திரத்தை கொடுத்தார். அவர்களது எண்ணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

இலங்கையில் கடந்த நாட்களை விட இன்று (24) தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு ந்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 22 கரட் தங்கத்தின் விலை 190,050 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,760 ரூபாவாக பதிவாகியுள்ளது

மேலும் 24 கரட் தங்கத்தின் விலை 207,250 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25,910 ரூபாவாக காணப்படுகின்றது.

நிறுத்தி வைத்த பேருந்தை திருடி சென்ற நபர்!

மொரட்டுவை, ராவத்தவத்த பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை திருடிச் சென்ற நபர் ஒருவரை வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாணந்துறை, மினுவன்பிட்டிய பொது மயானத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தையே சந்தேகநபர் கடத்திச் சென்றுள்ளார்.

சேவையிலிருந்து நீக்கிய உரிமையாளர்
இது தொடர்பில் தெரியவருகையில், திருடப்பட்ட பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் இரவு நேர பயணத்தை முடித்துக் கொண்டு பாணந்துறை மினுவன்பிட்டிய மயானத்தின் அருகில் பஸ்ஸை நிறுத்திவிட்டு வீடு சென்றுள்ளனர்.

மறுநாள் காலை பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் பஸ்ஸை எடுக்க சென்றபோது, அந்த இடத்தில் பஸ் இல்லாததால் பஸ்ஸின் உரிமையாளருக்கு இதுபற்றி தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, இது தொடர்பில் பஸ்ஸின் உரிமையாளர் பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்னர் அந்த பஸ்ஸின் சாரதியாக பணியாற்றியுள்ள நிலையில், பஸ்ஸின் உரிமையாளர் அவரை சேவையிலிருந்து நீக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் மினுவன்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்த இந்தியா!

இந்தியா தமது 2024 – 2025ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டில் இலங்கைக்கும் ஒதுக்கீடுகளை அதிகரித்துள்ளது.

அதன்படி நேபாளம் மற்றும் சீஷெல்ஸ் போன்ற அண்டை நாடுகளுக்கு இணையாக இலங்கைக்கும் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அதிகரிப்பு கிடைத்துள்ளது .

இந்தியாவின் 2024 – 2025ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் முன்வைத்தார்.

அதில் வெளிநாடுகளுக்கான இந்தியாவின் உதவித்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அந்தவகையில் . இலங்கைக்கு இந்திய ரூபாவில் 95 கோடி அதிகப்படியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.