புங்குதீவு மாணவி கொலை – சிந்தக பண்டாரவும் சாட்சியம்!

vi

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் சம்பவம் நடைபெற்றபோது பதவியில் இருந்த யாழ்ப்பாண மூத்த பொலிஸ் அத்தியட்சகர் வழங்கிய சாட்சியத்தின் அடிப்படையில் மூத்த பொலிஸ் பரிசோதகர் சித்தக பண்டார சாட்சியாக இணைக்கப்பட்டார். அவர் இன்று தீர்ப்பாயத்தில் சாட்சியம் வழங்கினார்.

அதேவேளை நீதிபதி ஒருவரால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை அதே நீதிபதிக்கு முன்பாகச் சாட்சியாக நிறுத்தியமைக்கு தீர்ப்பாயம் பிரதி மன்றாடியார் அதிபதியிடம் கடுமையாக ஆட்சேபித்தது.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சிந்தக பண்டார கடமையாற்றியபோது சந்தேகநபர்களைச் சித்திரவதைக்கு உட்படுத்தினார் என்ற குற்றத்துக்காக அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.