10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கப்பல்களுக்கு கடற்படையின் பாதுகாப்பு சேவை

111

இலங்கை கடற்படையின் காலி மத்திய நிலையத்தினூடாக சுமார் 10 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட கப்பல்களுக்கு  போக்குவரத்துக்கான பாதுகாப்பு சேவைகள்  வழங்கப்பட்டுள்ளன.
2015 நவம்பர் 13ம் திகதி முதல் இந்த  சேவைகள் ஊடாக  அரசாங்கத்திற்கு  சுமார் மூன்று பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கடற்படையினர் இதுபோன்று மேலும் இரு சேவை நிலையங்களை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய கடற் பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.