இளம் காதலர்கள் ஹோட்டல் ஒன்றில் உல்லாசமாக இருந்தவேளை காதலி ஹோட்டல் அறையில் மரணமடைந்த சம்பவம் பமுனுகம பொலிஸ் பிரிவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மினுவாங்கொட, கல்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது யுவதியே மரணமடைந்தவராவார்.
சம்பவ தினம் அன்று வழமைபோன்று அங்கு சென்று இருவரும் உல்லாசமாக இருந்தபோது காதலி திடீரென்று சுகயீனமடைந்துள்ளார்.
பின்னர் ஹோட்டல் முகாமையாளருடன் இணைந்து அந்த யுவதியை காதலர் பமுனுகம வைத்தியசாலையில் கொண்டு சென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக ராகமை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அந்த யுவதி இறந்துள்ளதாக தெரியவருகிறது.
சந்தேகத்தின் பேரில் யுவதியின் காதலரை பமுனுகம பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணை மேற்கொண் டுள்ளனர்.