நீரில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் பலி

neer

திருகோணமலை – மாவிலாறு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், நீரில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 11 மற்றும் 18 வயதுடைய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.