போலி கடவுச்சீட்டில் கனடா செல்லும் இலங்கையர்கள்! மோசடி அம்பலம்

pass

கடவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தபால் ஊழியர் ஒருவரை, இந்திய மத்திய குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

தலைமை கான்ஸ்டபிள் கே. முருகனுக்கு உதவிய குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார்.

கண்ணகி நகரை சேர்ந்த தபால் ஊழியர் தனசேகர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் பணியாற்றிய இவர் விரைவு தபால்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தபால் ஊழியர் தனசேகர், கான்ஸ்டபிள் முருகனுக்கு உதவியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டமையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கடவுச்சீட்டு மோசடி மூலம் பல இலங்கைத் தமிழர்கள் பயனடைந்துள்ளனர். அவர்களில் பலர் கனடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு போலி கடவுச்சீட்டின் உதவியுடன் சென்றுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மோசடி இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் இந்த மோசடி சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோசடியின் சந்தேகநபர்களான திருவல்லிக்கேணியைச் சேர்ந்த இராமலிங்கம், இலங்கைத் தமிழர்களான குணா, விமல் மற்றும் சுகாதர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.