வாசிங்கடனில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியர் ஜயந்த ரத்னாயக்கவை கைது செய்யுமாறு சர்வதேச பொலிஸாரிடம் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறித்த பாதுகாப்பு ஆலோசகரின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் அவர் நாடு திரும்பாமல் தலைமறைவாகியுள்ளார்.
இதனால் அவரை கைது செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் கஜபா படைப்பிரிவில் சேவை புரிந்த பிரிகேடியர் தரத்திலுள்ளவரையே கைது செய்யுமாறு தூதரகம் சர்வதேச பொலிஸாரிடம் கோரியுள்ளது.