பெண் ஒருவரை கடத்தல் கும்பலின் வாகனத்துள் இருந்து பிளாஸ்டிக் துப்பாக்கி

arrest-01-600-08-1499489281

அனுராதபுரம் கல்மில்லேவ பிரதேசத்தில் வைத்து ஏழு பேர்கொண்ட கும்பலால் கடத்தப்பட்ட பெண் ஒருவரை, ஹபரண பொலிசார் மீட்டுள்ளனர். அத்துடன் அந்த கடத்தல் குமபலையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அனுராதபுரம் கெக்கிராவ நகரத்தில் உள்ள கல்மில்லேவ என்ற இடத்தில் வைத்து குறித்த பெண் சிற்றுந்து ஒன்றில் வந்த கும்பலால் கடத்தபட்டார். பின்னர் அவர் ஹபரண பிரதேசத்தில் வைத்து அந்தக் கும்பலால் இறக்கிவிடப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட பெண் உடனடியாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலின்படி அவர் பொலிஸாரால் மீட்கப்பட்டதோடு, சிற்றுந்தில் வந்தவர்களும் பொலிஸாரால் விரட்டிப் பிடிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் மெதிரிகிரிய என்ற பிரதேசத்தைச் சேர்ந்த இளம் வாலிபர்கள் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் இவர்கள் பயணித்த வாகனத்துள் இருந்து பிளாஸ்டிக் துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவத்துக்கு காதல் தான் காரணம் என்றும், கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்ட பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் ஆனால் அந்த பெண் இராணுவ உறுப்பினர் ஒருவரைக் காதலித்துவந்ததாகவும் முதற்கட்ட விசாரணைகள் மூலம் வெளிவந்துள்ளது.