அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி: டிரம்ப் உடன் நாளை சந்திப்பு

போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி, முதல் கட்டமாக நேற்று போர்சுக்கல் சென்று அங்கு அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், லிஸ்பன் நகரில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
போர்ச்சுகல் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா புறப்பட்ட அவர், இன்று காலை வாஷிங்டன் விமான நிலையத்தில் தரையிறங்கினார். அங்கு அவரை இந்தியத் தூதர் மற்றும் அமெரிக்க உயரதிகாரிகள் வரவேற்றனர்.  மேலும், விமான நிலையத்தில் திரண்டிருந்த ஏராளமான இந்திய வம்சாவளியினர் ‘மோடி…மோடி’ என குரல் எழுப்பி அவரை வரவேற்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை முதன் முறையாக வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி நாளை சந்திக்க இருக்கிறார். அப்போது, இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவு குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறன்றனர்.
மோடியை வெள்ளை மாளிகையில் நாளை சந்திக்க ஆவலாக இருப்பதாகவும், முக்கிய பிரட்சனைகள் குறித்து உண்மையான நண்பனுடன் விவாதிக்க இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.