தலதா மாளிகைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்! இராணுவமுகாமை அகற்ற வேண்டாம்

கண்டி நகரில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றினால் தலதா மாளிகைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கண்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றுவதற்கு அரசாங்கம் தயாராகி வருகின்றது.

இதனால் பாதுகாப்பிற்கும், தலதா மாளிகைக்கும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ முகாமினை அகற்றுவது பல பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.