இங்கிலாந்து நாட்டில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. லீக் ஆட்டங்கள் முடிவுற்ற நிலையில், இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய 4 நாடுகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
அரையிறுதிக்கு முன்னேறிய 4 அணிகளில் 3 அணிகள் ஆசியாவைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் இந்திய அணி வீரர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இவ்விருந்தில் தூதரக அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் பங்கேற்றனர்.

அரையிறுதி போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை வரும் 15-ம் தேதி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் எதிர் கொள்கிறது. இறுதிப்போட்டி வரும் 18-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.