யாழ். பல்கலைக்கழ மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை வடக்கு மற்றும் கிழக்கைத் தவிர்ந்த ஏனைய மாகாணத்திலுள்ள நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு பிரதிவாதிகளால் கோரப்பட்டுள்ளது.
குறித்த படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸார் தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த வழக்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்ந்த வேறொரு மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு பொலிஸார் தரப்பின் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் ஜுலை மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்துவதாக அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்த மனுவிற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் எதிர்ப்பு மனுவும் இன்று சமர்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







