வெள்ளவத்தை அனர்த்தம்! கட்டட உரிமையாளர் பிணையில் விடுதலை!!

வெள்ளவத்தையில் ஐந்து மாடிக் கட்டடம் உடைந்து வீழ்ந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அதன் உரிமையாளர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு கல்கிஸ்சை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபர் 25,000 ரூபா ரொக்கப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இதன்போது, சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி நளின் டி.இந்திரதிஸ்ஸ ஆஜராகியதுடன் குறித்த வழக்கு எதிர்வரும் 09ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி சவோய் திரையரங்குக்கு அருகில் அமைந்திருந்த ஐந்து மாடிக்கட்டடம் உடைந்து வீழ்ந்தது.

இந்த அனர்த்தம் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 21 பேர் வரை காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.