ஊடகவியலாளரின் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை!

வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடுப் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவரின் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பிள்ளைகளின் தாயாகிய கலைச்செல்வன் பவானி (39) என்பவரே அவரது வீடில் இவ்வாறு தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்தப் பெண்ணின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்ட நிலையில் நேற்று (12) மதியம் சடலம் அவரது கணவனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் நெடுங்கேணி இந்து மயானத்தில் சடலம் நல்லடக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளமை குறிபிடத்தக்கது.