மேதினத்திற்குப் பிறகு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பலம்பெற்று விட்டார் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
தற்போது ஜாதகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு நல்ல காலம் பிறந்துள்ளது. கொழும்பு, காலி மற்றும் கண்டி என அனைத்து இடங்களிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்காக கூடிய கூட்டமே இதை உணர்த்தியிருக்கும் என குறிப்பிட்டார்.
முதல் தடவை மேதினக்கூட்டம் நடத்தும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படங்கள் இருக்கவில்லை.
இரண்டாம் தடவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படங்கள் குறைந்த அளவிலேயே காணப்பட்டது. அவருடைய பெயரை யாரும் உச்சரிக்கவில்லை.
மேலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மீது அக்கறையுள்ள, 2020இல் ஆட்சி அமைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எம்முடன் இணைவார்கள் எனவும் குறிப்பிட்டார். எமது கட்சியை ஒருநாளும் வீழ்த்த முடியாது எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.