மக்கள் எழுச்சியால் குறைக்கப்படும் எனது பாதுகாப்பு! மஹிந்த கோபம்

பாதுகாப்பு பற்றி எவர் என்ன பேசினாலும் மக்களின் ஆதரவு குறையில்லாமல் கிடைப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு நாளிதழ் ஒன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

காலி முகத்திடலில் நடத்தப்பட்ட மே தினக் கூட்டத்தின் பின்னரே எனது பாதுகாப்பு குறித்த பலருக்கு நினைவு வந்துள்ளது.

நான் மக்களிடம் செல்வதனை எவரினாலும் தடுத்து நிறுத்த முடியாது.

இந்த அரசாங்கத்தின் பயணம் ஆரோக்கியமானதல்ல, இந்த அரசாங்கம் நாளுக்கு நாள் மக்களிடமிருந்து விலகிச் செல்கின்றது.

அவருக்கு எவ்வளவு பாதுகாப்பு இவருக்கு எவ்வளவு பாதுகாப்பு என்று நான் தேடிப் பார்ப்பதில்லை.

எனக்கு பாதுகாப்பு தேவையில்லை எனக் கூறும் சிலர் தங்களுக்கு கூடுதல் பாதுகாப்பினை வழங்கிக் கொள்கின்றனர்.

இந்த நாட்டிலிருந்து விடுதலைப் புலிப் பயங்கரவாதத்தை யார் இல்லாமல் செய்தார்கள் என்பது அனைத்து மக்களுக்கும் தெரியும் என மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.