தமிழக அரசின் 2017 – 18ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 16ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் மீதான விவாதம் நடந்து பேரவை கூட்டம் கூட தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பட்ஜெட் குறித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறுகையில், வழக்கமாக பட்ஜெட் கூட்ட தொடர் ஒரு மாதம் வரை நடக்கும். ஆனால் இந்த முறை பட்ஜெட் கூட்ட தொடர் ஒரு வாரத்திலேயே முடிந்து விட்டது.
முன்னதாக பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக பட்ஜெட் நகல் இருந்த பெட்டியை வெளியில் எடுத்து செல்லக்கூடாது. ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் பெட்டியை ஜெயலலிதா சமாதிக்கு எடுத்து சென்றுள்ளார். அதிலும் காலி பெட்டியை எடுத்து சென்று ஏமாற்றி விட்டனர் என்றார்.