உண்மையான கிரிக்கெட் ரசிகன் பெண்கள் கிரிக்கெட்டை பார்ப்பான்: சச்சின்

மகளிர் தினம் நேற்று உலகளவில் கொண்டாடப்பட்டது. இங்கிலாந்தில் ஐ.சி.சி. வெண்கள் உலகக்கோப்பை விரைவில் நடக்க இருக்கிறது. இந்த தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அப்போது இந்த தொடருக்கான நல்லெண்ணத் தூதராக இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அறிவிக்கப்பட்டார்.

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டது குறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘நீங்கள் உண்மையான கிரிக்கெட் ரசிகராக இருந்தால், பெண்கள் கிரிக்கெட் நடைபெறும் மைதானத்திற்குச் சென்று  போட்டியை கண்டு களிப்பீர்கள்.

அவர்கள் திறமையான வீராங்கனைகள். சரியான போட்டியை ஏற்படுத்தக் கூடியவர்கள். கடுமையான போரிடும் குணம் கொண்ட அவர்கள், சரியான கிரிக்கெட் நோக்கத்துடன் விளையாடக்கூடியவர்கள். அப்புறம் ஏன் நீங்கள் மைதானம் செல்ல விரும்பக்கூடாது?.

நீங்கள் கண்ணாடி முன் நின்று கொண்டு, உங்களுக்குள்ளாகவே நீங்கள் கிரிக்கெட் ரசிகனா அல்லது கிரிக்கெட் விரும்பிகளா என்று கேள்வி கேட்க வேண்டும். ஆம் என்றால் நீங்கள் மைதானம் சென்று போட்டியை பார்ப்பீர்கள்’’ என்றார்.