ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தேசிய லொத்தர் சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய லொத்தர் சபையின் உதவி விற்பனையாளர்களாக ஆயிரம் பெண்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என தேசிய லொத்தர் சபையின் தலைவி சர்மிளா பெரேரா தெரிவித்துள்ளார்.
லொத்தர் சீட்டு விற்பனையை அதிகரிப்பதற்கும் பெண்களின் வேலையில்லா பிரச்சினையை தீர்ப்பதற்கும் இவ்வாறு ஆயிரம் பெண்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
சுமார் 12000 பேர் நாளாந்த லொத்தர் சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த எண்ணிக்கை 13000 மாக உயர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
லொத்தர் சீட்டு விற்பனையை உயர்த்துவதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்காக தேசிய லொத்தர் சபையின் பங்களிப்பு மேலும் உயர்த்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.