முட்டாள்களை தலைவர்களாக கொண்ட இனம் தமிழ் இனம்!

சமஷ்டி முறையிலான அரசியலமைப்பை வேண்டாம் என மறுத்துவிட்ட முட்டாள்களை ஆரம்பகால தலைவர்களாக கொண்ட இனம் தமிழ் இனம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தென்னிலங்கை சிங்கள தலைவர்களே தர தயார் என தெரிவித்த சமஷ்டியையாவது பெற்று இருக்லாம் அல்லது முஹமத் அலி ஜின்னாவை போல 1948 ஆம் ஆண்டு பிடிவாதமாக நின்று தனிநாட்டை பெற முயன்று இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 1987 ஆம் அண்டு இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, வடக்கு கிழக்கை இணைத்து தந்த தீர்வை நாம் புறக்கணித்தோம்.

அதேபோன்று 2000 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கொண்டுவந்த தீர்வு, இன்று கிடைக்கும் என எதிர்பார்க்கும் தீர்வை விட முன்னேற்றகரமானது, அதையும் நாம் புறக்கணித்தோம்.

இறுதியில் 2005 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவை தேர்தலில் வெற்றி பெற விடாமல் செய்து, ஒஸ்லோ தீர்மான திட்டத்தையும் இழந்து விட்டோம்.

ஆகவே வரலாற்று முழுக்க சந்தப்பங்கள் கைநழுவி போய் விட்டன என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.