பெண்களை புறக்கணித்த எழுக தமிழ்: அனந்தி சசிதரன் அதிருப்தி!

மட்டக்களப்பில் நடந்த எழுக தமிழ்  புறக்கணித்து விட்டது என வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

கடந்த 30 வருடகால யுத்தத்தின் ஒட்டுமொத்த வலிகளைச் சுமந்த பெண்கள் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டு்ளார்.

எழுக தமிழ் நிகழ்வுக்கு வந்திருந்த பெண்கள், மேடையில் ஏறிப் பேசுமாறு என்னை வலியுறுத்தினர்.

ஆனால், அழைக்காமல் மேடையேறுவது அகௌரவம் என்பதை அந்தப் பெண்களுக்குச் சொல்லி வைத்தேன். ஒட்டுமொத்தத்தில் கிழக்கு எழுக தமிழ், பெண்களைப் பிரதிபலிக்கத் தவறிவிட்டது எனவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பில் நடந்த எழுக தமிழ் நிகழ்வு குறித்து ஊடகங்களுக்கு  கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“யாழ். எழுக நிகழ்வுகளில் கூட, தீர்வுத் திட்டம் குறித்துப் பிரஸ்தாபிக்கும்போது, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தேவைகள், தீர்வுகள் குறித்து ஆலோசனைகள் பெறப்படவில்லை.   தமிழ் மக்கள் பேரவையும் எழுக தமிழும், தன்னுடைய பிழைகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

“எழுக தமிழின் பிரகடனத்தில், காணாமல் போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் என்று தமிழ் மக்களின் பல விவகாரங்கள் கூறப்பட்டிருந்ததால், அதில் கலந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலில் நானும் சக மாகாணசபை உறுப்பினர்களான விந்தன் சிவநேசன் மற்றும் 35 பெண்களோடு யாழ்ப்பாணத்திலிருந்து எனது சொந்தச் செலவில் வந்து கலந்துகொண்டேன்.

ஆனால், எழுக தமிழ் நிகழ்வில் பேசியவர்கள் அனைவரும் ஆண்களாகவே இருந்தார்கள்.     இந்நிலையில் தமிழ்ப்பேரவையில் பெண்ணுரிமை பெண்களுக்கான சமவாய்ப்பு பற்றி எப்படி கதைப்பது? பெண்களுக்கு இடமில்லாத அப்பேரவையில் எதிர்காலம் எவ்வாறிருக்கும் என்றார்.