முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தலைமையில் அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று கருணா தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதற்கமைய தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் கட்சியை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் செயலாளராக மட்டக்களப்பைச் சேர்ந்த வி.கமலதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.