மஹிந்தவின் பதாதைக்கு சேதம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பதாதை உடைத்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் வைக்கப்பட்டிருந்த பாதாதைகளே இவ்வாறு அகற்றப்பட்டுள்ளது.

வடமேல் மற்றும் மேல்மாகாண சபைகளை இணைக்கும் மகா ஓயாவின் ஊடாக அமைக்கப்படும் பாலம் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, இத் திட்டத்தை முன்மொழிந்திருந்த முன்னாள் அமைச்சர் காலஞ்சென்ற ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளே ஆகியோரது உருவப்படங்களுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படமும் அடங்கிய பதாதை அங்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படம் மாத்திரம் உடைத்து நீக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் பிரதியமைச்சர் அருந்திக பெர்ணான்டோ முறைப்பாடு செய்துள்ளார்.