வெளிநாட்டு டி20 லீக் தொடரில் விளையாடுகிறார் யூசுப் பதான்!!

இந்திய அணியில் இடம்பிடித்த போது பிரபலமானதை விட ஐ.பி.எல். தொடரின்மூலம் பிரபலமானவர் யூசுப் பதான். இவர் தற்போது கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். ராஜஸ்தான் அணியில் இவர் இடம்பிடித்திருக்கும்போது அந்த அணி அறிமுக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.

தற்போது யூசுப் பதான் இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஐ.பி.எல். தொடரில் மட்டுமே இடம்பிடித்து வருகிறார். இந்நிலையில் ஹாங் காங் டி20 லீக் தொடரில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் வெளிநாட்டி டி20 லீக்கில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

யூசுப் பதானை கவ்லூன் கேன்டன்ஸ் என்ற அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ஹாங் காங் டி20 லீக் தொடர் மார்ச் 8-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.

இந்த லீக்கில் பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி, இங்கிலாந்தின் தைமல் மில்ஸ், இலங்கையின் சங்ககரா, தில்ஷன், வெஸ்ட் இண்டீசின் டேரன் சமி, நியூசிலாந்தின் ஜேம்ஸ் பிராங்க்ளின் உள்பட பலரும் விளையாட இருக்கிறார்கள்.