அமெரிக்க ஜனாதிபதியாக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்ட டிரம்ப், தாம் கலந்து கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தமது மனைவி மெலானியா டிரம்பை பொருட்படுத்தாமல் தனிமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப் அதிரடி அரசாணைகளால் உள்ளூர் மற்றும் உலக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை தினசரி நிகழ்த்தி வருகிறார்.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மை கொண்ட 7 நாடுகளுக்கு தடை, அதை எதிர்த்த அதிகாரிகளின் பதவி பறிப்பு, எதிர் கருத்து தெரிவித்த ஊடக செய்திகளை போலி என புறந்தள்ளியது, அவிஸ்திரேலியா பிரதமருடனான தொலைப்பேசி உரையாடலை பாதியில் துண்டித்தது என அதிரடி காட்டிய டிரம்ப், பதவியேற்ற முதல் வாரத்தில் இருந்தே தமது மனைவி மெலானியாவை கண்டுகொள்வதில்லை என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது மனை மெலானியா ஆகியோர் கலந்துகொண்ட பல பொது நிகழ்ச்சிகளில் இது வெளிப்படையாகவே தெரிய வந்துள்ளது. கடந்த ஜனவரி 20-ஆம் திகதி வெள்ளை மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தலைமையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த டிரம்ப் தமது மனைவி மெலானியாவை தனியாக விட்டு இரண்டு அடி முன்னால் நடந்து சென்றதும் பார்வையாளர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏழுப்பியிருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் டிரம்ப் தனியாகவும் மெலானியா தனியாகவும் பங்கேற்றுள்ளதை பொதுமக்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.