லண்டனில் தொடங்கிய நயன்தாராவின் கொலையுதிர் காலம்

தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகை என்றால் அது நயன்தாராதான். ‘அறம்’, ‘டோரா’ ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்ட நயன்தாரா அடுத்ததாக இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் ஆகிய படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். இதில், கொலையுதிர் காலம் படத்திற்கான படப்பிடிப்பு நேற்று லண்டனில் தொடங்கியுள்ளது.

இப்படத்தை ‘பில்லா2’, ‘உன்னைப்போல் ஒருவன்’ ஆகிய படங்களை இயக்கி சக்ரி டோலட்டி இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதுடன், படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் வாசு பாக்னானியுடன் இணைந்து தயாரிக்கவும் செய்துள்ளார்.

இப்படம் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் கூறும்போது, தரமான படங்களை தயாரிக்கும் நிறுவனமாக என் பட நிறுவனம் இருக்கவேண்டும் என்பது என் கனவு. என் நண்பரும், இயக்குனருமான சக்ரி டோலட்டி இந்த படத்தின் திரைக்கதை ஆங்கில படங்களுக்கு இணையாக அமைத்து இருக்கிறார்.

நாயகி நயன்தாரா இந்த கதைக்கு பொருத்தமாக இருககிறார். மேலும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் வாசு பாக்னானியுடன் இணைந்து இந்த படத்தை தயாரிப்பதில் எனக்கு மிகப்பெரிய பெருமை என்று கூறினார்.