ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு குரல் கொடுத்த காவல் அதிகாரி சஸ்பெண்ட்டா? வெளியான உண்மை தகவல்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக நடந்து வரும் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் வீரியம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் பயனாக இன்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.

ஆனால் இதில் போராட்டக்காரர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. நிரந்தரச் சட்டம் வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் காவலர் மதியழகன் ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.

அவர் இது ஒரு துவக்கம்தான். இன்னும் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசுவதால் எனக்கு எந்த பயமும் இல்லை. காவல் துறையில் இருக்கும் எங்களுக்கும் உணர்வு இருக்கிறது.

இந்த மண்ணில்தான் நேதாஜியும் பிறந்தார். காந்தியும் பிறந்தார். காந்தி பிறந்த மண்ணு என்று ஓட்டு கேட்க வந்த மோடிக்கு அப்போது தெரியவில்லையா விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்.

தமிழனுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம் என்று கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து இவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக இன்று இரவு சமூக தளங்களில் செய்திகள் வைரலாக பரவின.

இதுகுறித்து சென்னை காவல்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, இது ஒரு தவறான செய்தி எனவும் இதை யாரும் நம்பவேண்டாம் என கூறியுள்ளனர்.