பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று காலை இந்தியா நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய அரசாங்கத்தின் விசேட அழைப்பிற்கமைய பொன்சேகாவின் விஜயம் அமைந்துள்ளது.
பொன்சேகா இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளார்.
இதற்கு மேலதிகமாக அவர் இந்திய பாதுகாப்பு பிரதானி மற்றும் அந்த நாட்டு புலனாய்வு பிரிவு பிரதானியை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சருடன் அவரது சர்வதேச நடவடிக்கை தொடர்பிலான இணைப்பு செயலாளர் கபினாத் சேனக சில்வா இந்த சந்திப்பில் இணையவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.