யாழ். சிகையலங்கார நடத்துனர்களுக்கு ஓர் அறிவித்தல்!

தைப்பொங்கலை முன்னிட்டு நாளை சனிக்கிழமை(14) யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்துச் சிகை அலங்கார நிலையங்களையும் (சலூன்) மூட வேண்டும் என யாழ். மாவட்டச் சிகை ஒப்பனையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் நாளை மறுதினமும் சிகை அலங்கார நிலையங்களை மூட வேண்டும் என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த விதிமுறையை மீறும் சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச் சங்கம் அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.