அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திடம் கையளிப்பது தொடர்பான இறுதிதீர்மானம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை அறிவித்துள்ளார்.
ஹொரணையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
முன்னைய அரசாங்கத்தை போன்று பொதுமக்களை விரட்டியடுத்து பலவந்தமாக காணிகளைதற்போதைய அரசாங்கம் கைப்பற்றவில்லை.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து நாட்டுக்கு நன்மையை கொண்டு வரவேமுயற்சிக்கப்படுகிறது.
எனவே அது தொடர்பான தீர்மானங்களை நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக பிரதமர் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.