ராஜபக்சவுக்கு பிரதமராகும் வாய்ப்பு!!

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவே எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தில் பிரதமர் பதவியை வகிக்க கூடிய தகுதியான நபர் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கட்சியின் தலைமையை ஏற்றுக்கொண்டு மிகவும் நேர்மையாக செயற்பட்டு வருகிறார்.

முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் என்ற போதிலும் தங்காலையில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரிலேயே விமர்சித்தார்.

சமல் ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக சரியாக செயற்படும் நபர் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.