கருணாநிதி சுகம் பெற வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சுகயீனமடைந்து சென்னை கௌவேரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவருகிறார்.

இந்த நிலையில் அவர் சுகம் பெறவேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துச்செய்தியை அனுப்பியுள்ளார்.

மேலும் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன் போது தாம்இலங்கை ஜனாதிபதியினதும் மக்களினதும் வாழ்த்துச்செய்தியை எடுத்து வந்துள்ளதாக குறிப்பிட்டதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.