விபத்துக்கு முன்னர் பெண் விமானி கூறியது என்ன..? வைரலாகும் காணொளி

அண்மையில் கொலம்பியாவில் 75 பேரின் உயிரை காவு கொண்ட விமான விபத்து தொடர்பில் பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், குறித்த விமானத்தில் விமானியாக தனது முதல் பயணத்தை ஆரம்பித்த 29 வயதான Sisy Arias என்ற பெண் தொடர்பிலான செய்திகள் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

குறித்த பெண் விமானி விபத்து இடம்பெறுவதற்கு முன்னர் காணொளி பதிவொன்றை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானியாக தனது முதல் பயணத்தை ஆரம்பிக்கும் இன்றைய நாள் தனக்கு மிகவும் அதிஷ்டமான நாள் என குறித்த பெண் விமானி அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விமானியாக தனது முதல் பயணத்தை ஆரம்பித்த குறித்த பெண்ணுக்கு அது கடைசி பயணமாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.