மட்டக்களப்பில் பெரும் சோகம்

மட்டக்களப்பில் கடலில் மூழ்கி இரு மாணவர்கள் காணாமல் போயுள்ளனதால் பெரும் சோகம் மட்டக்களப்பு ஏறாவூர் புன்னக்குடா கடலில் நேற்று மாலை நீராடச் சென்ற இரு இளைஞர்கள், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

மற்றுமொருவர் காப்பாற்றப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’.

ஏறாவூரிலுள்ள தேசிய பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கலை பரிவில் முதலாம் வருடம் கல்வி பயிலும் மாணவர்கள் குழு, புன்னக்குடா கடலில் நீராடச் சென்ற வேளை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

இச்சம்பவத்தில் பன்குடாவெளி தளவாய் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் சிவதர்சன், ஏறாவூரைச் சேர்ந்த எப்.பர்ஹான், ஆகிய இரு மாணவர்களும் காணாமல் போயுள்ளனர்.

ஏறாவூரைச் சேர்ந்த சேகுதாவூத் அக்ரம், என்ற மாணவன் மயக்கமடைந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

காணாமல் போன இருவரையும் தேடும் பணியில் பொதுமக்களும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.