களைகட்டியது பிரபாகரனின் பிறந்தநாள் – இராட்சத கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 62ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் இந்தியாவில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

சென்னை இராயப்பேட்டையில் தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் ஏற்பாட்டில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12 மணிக்கு இராட்சத கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் தமது மகிழ்ச்சியை மக்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் தலைவரின் பிறந்தநாளை கொண்டாடியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒவ்வொரு வருடமும் பிரபாகரனின் பிறந்தநாளை தவறாமல் கொண்டாடி வருவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.